Thursday, June 2, 2016

9 - ஆதனூர்

                               
ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்

கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது இக்கோயில்.

பாற்கடலில் சயனித்திருந்த பெருமாளை சந்திக்க வந்த பிருகு முனிவருக்கு மகாலட்சுமி மாலை ஒன்றை தந்தார்.பிருகு முனிவர் அம்மாலையை இந்திரனுக்குத் தர, அவனோ அதை தன் யானை ஐராவதத்தின் மீது வைக்க...அந்த மாலையை அது தூக்கி வீசியது.இதனால் கோபமடைந்த முனிவர், இந்திரனை பூமியில் மனித்னாகப் பிறக்க சபித்துவிடுகிறார்.தன் சாபம் நீங்க, மகாலட்சுமையை இந்திரன் வேண்ட, பூலோகத்தில் பிருகு முனிவரின் மகளாகத் தான் அவதரிக்கப் போவதாகவும், அந்த அவதாரத்தில் புருமாளுடன் தனக்கு நடக்கும் திருமணத்தை இந்திரன் காணுகையில் சாபம் நீங்கும் என்றும் கூறுகிறாள்.இப்படியாக இந்திரன் சாபம் நீங்குவதாக மரபு வழி வரலாறு உண்டு.

இத்தலத்தின் சிறப்பு என்னவெனில்...

ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதருக்கு மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திருமங்கையாழ்வாருக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதாம்.அவர் பெருமானை வேண்ட, அவர் கனவில் தோன்றிய பெருமான், கொள்ளிடக்கரையில் வந்து பணம் பெற்றுக் கொள்ளும்படிக் கூறினார்..திருமங்கையாழ்வாரும் கொள்ளிடக் கரைக்கு வந்தார்.அங்கு, தலைப்பாகையுடன் ஒரு வணிகரை சந்தித்தார்,.அவ்வணிகரிடம் ஒரு காலி மரக்கால், ஏடு, எழுத்தாணி இருந்தது.

அவர், ஆழ்வாரிடம், இறைவன் அவருக்கு உதவ தன்னை அனுப்பியதாகக் கூறி...பணியாளர்களுக்குக் கூலியாக அக்காலி மரக்காலில் மணலை அளந்து கொடுத்தால், உண்மையாய் உழைத்தவர்களுக்கு அது பொன்னாகவும், உழைக்காமல் ஏமாற்றியவருக்கு மணலாகவும் தோன்றும் என்றார்.

அவ்வாறே..ஆழ்வார் மரக்காலில் மணலை அளந்து கொடுத்த போது சிலருக்கு பொன்னாகவும், சிலருக்கு மணலாகவுமே இருந்தது.மணலைப் பெற்றவர்கள் அடிக்க வர...வணிகரும் ஓட...ஆழ்வாரும் அவர் பின்னால் ஓடினார்.வணிகர் இத்தலத்தில் வந்து நின்று, வணிகராக வந்தது தானே என பெருமான் உணர்த்தி ., எழுத்தாணியால் ஏட்டில் எழுதி ஆழ்வாருக்கு உபதேசித்தருளினார்.

இதனைக் குறிக்கும் விதமாக, இத்தலப் பெருமாள் மரக்காலை தலைக்குக் கீழ் வைத்து, ஏடு, எழுத்தாணியைக் கையில் கொண்டவாறு பள்ளிக் கொண்டக் கோலத்தில் உள்ளார்.

இலங்கை செல்லும் முன் ஸ்ரீராமனும், ஆஞ்சநேயரும் இங்கு வந்துத் தங்கி சென்ற இடமுமாகக் கூறப்படுகிறது.

இத்தலத்தில் பள்ளிக்கொண்டக் கோலத்தில் காட்சித் தரும் பெருமாள் ஸ்ரீ ஆண்டளிக்கும் ஐயன் என அழைக்கப் படுகிறார்.கருவறையில் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூ தேவியுடன் தமது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ பள்ளிக்கொண்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.மரக்காலைத் தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணியும்..ஏடும் கொண்டுள்ளதால் பெருமானின் இத்தோற்றம் உலகுக்குப் படியளந்த பெருமாள் ஓய்வாக படுத்துக் கொண்டக் கோலம் என அழைக்கப் படுகிறது.

இக்கோயிலில் அரங்கனின் நாயகி தாயார் பார்கவியாக எழுந்தருளியுள்ளார்.

இத்தலத்தில் மகாவிஷ்ணு நோக்கி காமதேனு தவம் இருந்தது.அதனால்,ஆதனூர் என்று பெயர். (ஆ...தன்..ஊர்)

மூன்று நிலை ராஜகோபுரத்தையுடைய இக்கோயிலில், காமதேனுவிற்கும், காமதேனுவின் மகள் நந்தினிக்கும் பெருமாளின் சந்நிதியில் சிற்பங்கள் உள்ளன.

பரமபதத்தில் மாகாவிஷ்ணுவின் முன்பாக இரு தூண்கள் இருக்கும்.மனித உடலில் இருந்து ஆன்மா இவ்விரு தூண்களையும் தழுவ மோட்சம் பெறும் என்பது ஐதீகம்.அதுபோன்று இரு தூண்கள் இத்தலத்தில் கருவறைக்கு எதிரில் உள்ள அர்த்த மண்டபத்தில் பெருமாளின் பாதம் மற்றும் தலைக்கு எதிரில் உள்ளன.

இரட்டைப்பட எண்ணிக்கையில்  வலம் வந்து, இத்தூண்களைப் பற்றிக் கொண்டு, பெருமாளின் பாதத்தையும்,திருமுகத்தையும் தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இக்கோயிலுக்கான த்னிப் பாசுரம் ஏதும் இல்லை.திருமங்கையாழ்வார் திருமடலில் ஒருவரியில் இக்கோயிலைக் குறிப்பிட்டுள்ளார்

முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளிக்கும் ஐயனை

என் கிறார்.

தல விருட்சம் பாடலி மரம்.தீர்த்தம்- surya புஷ்கரணி, தாமரைத் தடாகம்

No comments:

Post a Comment