Saturday, June 18, 2016

27 - திருக்கண்ணமங்கை

                                             


பக்தவத்சலப் பெருமாள் கோயில்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது இக்கோயில்

மூலவர்- பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப்பெருமாள்

உற்சவர் - பெரும்புறக்கடல்

தாயார்- கண்ணமங்கை நாயகி, அபிஷேகவல்லி

விருட்சம் - மகிழம்

தீர்த்தம்- தர்ஷண புஷ்கரணி

திருமங்கையாழ்வார் மங்களாசாசன  ம்   செய்தத் தலம்

பெருமாளை இத்தலத்தில் தரிசித்தவர்கள் வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள்

ஒரு புண்ணியத் தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம்,ஆரண்யம்,மண்டபம்,தீர்த்தம்,க்ஷேத்ரம், நதி,நகரம் போன்ற அனைத்து லட்சணங்களும் அமையப்பெற்றதால் இத்தலத்தை சப்த புண்ணியச் சேத்திரம் என்பர்

இத்தலத்தில் நடந்த திருமால், திருமகள் திருமணத்தைக் காண அனைத்துத் தேவர்களும் குவிந்தனராம்.அவர்கள் எப்போதும் இத்தலத்தைக் காண விரும்பியதால் தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து மகிழ்கின்றனராம்.இன்றும் தாயார் சந்நதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது.அது எவ்வளவு காலமாக உள்லது என்பதை யாரும் அறியமாட்டார்கள்.இதில் உள்ள தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லையாம்

சிவபெருமான் நாங்கு உருவம் எடுத்து நான் கு திசையையும் இங்கு காத்து வருகிறாராம்.

பொதுவாக நான்கு கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியைசந்திக்கச் சென்றதால் இரண்டு கரங்களுடன் அருள்பாலிக்கிறார்

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார்.அதிலிருந்து தெளித்து விழுந்தஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது.அதுவே தர்ஷன் (தரிசன) புஅஹ்கரணி ஆனது.சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம்நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியைக் கண்டதும் சாபம் நீங்கியது.இங்குள்ள தாயரை இந்தத் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்வதால் தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.

நாலாயிரதிவ்வியபிரபந்தத்தை தொகுத்த நாதமுனிவர்க்கு திருக்கண்ணம்ங்கையாண்டான் என்ற சீடன் இருந்தார்.இவர் பெருமாளீடம் ஈடுபாடு கொண்டு கோயிலை சுத்தம் செய்து வந்தார்.ஒருநாள் நாய் வடிவம் கொண்டு ஓடி ஜோதியாகி இறைவனுடன் கலந்தார்.ஆகவே இத்தலம் அவர் பெயரிலேயே அமைந்தது.

பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவைத் தோன்றின.இறுதியில் மகாலட்சுமி வெளிவந்தார்.அப்போது அவர் பெருமாளின் அழகியத் தோற்றத்தைக் கண்டார்.அவரை அடைய தவம் இருந்தார்.இதையறிந்த பெருமாள் தன் மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாளை குறித்துத் தரச் சொன்னார்.முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ லட்சுமியை மணந்தார்.பெருமாள் பாற்கடலை விட்டு வந்து லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு பெருபுறக்கடல் என்ற திருநாமம் ஏற்பட்டது. லட்சுமி இங்கு தங்கியதால் இத்தலத்திற்கு லட்சுமிவனம் என்ற பெயரும்,கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம் என்ற பெயரும் ஏற்பட்டது.




No comments:

Post a Comment