பேரருளாளன் பெருமாள் கோயில்
திருச்செம்பொன் செய்கோயில்...திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்ற தலம்.
திருநாங்கூரில் நடுவில் அமைந்துள்ளதலமாகும்
இராவணனை அழித்த்பின் ஸ்ரீராமன் இத்தலத்தில் இருந்த திருடநேத்திரர் எனற முனிவரின் குடிலில் தங்கி, அவர் கூறியபடி தங்கத்தினால் பசு செய்து அப்பசுவைத் தானம் செய்தார்.அந்தப் பொன்னைக் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டபடியால் செம்பொன்செய் கோயில் என தலவரலாறு கூறுகிறது
திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் தைஅமாவாசைக்கு அடுத்த நாள் இப்பெருமாளும் திருநாங்கூர் கருடசேவையில் எழுந்தருளுவார்
இறைவன்_ செம்பொன் ரங்கர், ஹேமரங்கர்,பேரருளாளன்
தாயார் - அல்லிமாமலர் நாச்சியார்
தீர்த்தம் - ஹேம புஷ்கரணி, கனக தீர்த்தம்
No comments:
Post a Comment