Saturday, June 11, 2016

20 - நாச்சியார் கோயில்

                                               

கோயிலின் பெயரே ஊரின் பெயராக அமைந்திருக்கும் ஊர்களில் நாச்சியார் கோயிலும் ஒன்று.கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர்.திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும், மணம் கமழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்பதாகும்.

நாச்சியார் கோயில், சோழர் காலத்தில் கிபி 5ஆம் நூற்றாண்டு கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டது, சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரே வைணவக் கோயில் இதுதான். இது ஒரு மாடக்கோயில் (யானை ஏறமுடியாது)

இக்கோயில் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏற வேண்டும். இத்தலத்தில் வஞ்சளவல்லி தாயாருக்கே முதலிடம்..ஆதாலால் நாச்சியார் கோயில் என்றானது.மேதாவி என்னும் மகரிஷியின் தவப்பயனால் வஞ்சளமரத்தடியில் கிடந்த குழந்தையே வஞ்சளவல்லி ஆனாள்.

வஞ்சளவல்லி பருவம் அடைந்ததும் எம்பெருமான் தன் ஐந்து அம்சமான, சங்கர்ஷணன்,ப்பிரத்யும்னன்,அநிருத்தன்,சாம்பன், மற்றும் வாசுதேவன் ஆகிய ஐந்து உருவங்களில் மகரிஷியின் குடிலுக்கு வந்து விருந்துண்டு கைகழுவும் போது நீர் கொடுத்த வஞ்சளவல்லியின் கைப்பிடிக்க, அதைப்பார்த்த மகரிஷி கோபம் கொண்டு சாபம் கொடுக்கும் நிலையில் ஐவர் ஒருவராகி வஞ்சளவல்லியை கரம் பிடித்தார்.மகரிஷியை ஏறிட்டு இரந்து நின்ற கோலத்தில் காட்சி தந்தார்.இதே கோலத்திலேயே கருவறையில் காட்சி தருகிறார்.

இங்கு கருட சேவை புகழ் பெற்றது.இவ்விழா, மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும்.இந்நிகழ்வின் போது 4டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிவுலா வருவார்.இதில் சிறப்பு என்னவெனில், இவ்வளவு எடையுள்ள சிலையை முதலில் நாங்கு பேர்ம் பின்னர் 8-16-32-64-128 பேரும் தூக்குவார்கள்.முதலில் நால்வரால் மட்டுமே தூக்க முடிந்த சிலை கோயிலைவிட்டு வரும்போது 128 பேர் இல்லாவிட்டால் தூக்கமுடியாது.இந்நிகழ்ச்சி முடிந்ததும் கோயிலுக்கு சிலையை எடுத்துப் போகும் போது இதே 128-64-32-16-8 என முடிந்து 4 பேற் மட்டுமே கோயிலுக்குள் எடுத்துச் செல்வர்.

No comments:

Post a Comment