Wednesday, June 29, 2016

42 - திருக்கோஷ்டியூர்

                                       

சௌமிநாராயணன் பெருமாள் கோயில்

சிவகங்கை மாவட்டத்தில் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ளது.மதுரையிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலும், சிவகங்கை-திருப்பத்தூர் சாலயில்திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கிலோமீட்டர் தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

கருவறையில், ஸ்ரீதேவி,பூதேவி  உடனுறை    சௌமிநாராயணனுடன்,மதுகைடபர்,இந்திரன், புருரூப சக்கரவர்த்தி,கதம்ப மகரிஷி,பிரம்மா, சரஸ்வதி, சாவித்ரி ஆகியோரும் உள்ளனர்.அருகில், சந்தான கிருஷ்ணன் தொட்டிலில் உள்ளார்.இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர்.மகாலட்சுமி தாயாருக்கு தனி சந்நிதி உள்ளது.

ஓம்ந மோ நாராயணாய..எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.விமானத்தில் கீழ் தளத்தில் நர்த்த்ன கிருஷ்ணர்(பூலோக பெருமாள்) முதல்தளத்தில் ஆதிஷேசன் மீது சயன கோலத்தில் சௌமியநாராயணர் ,...இரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணர்..மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் எனசுவாமி நாங்கு நிலைகளில் அருளுகிறார்

புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்த போது மகாமகம் பண்டிகை வந்தது.அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபன்.அவருக்காக ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில்
கங்கை பொங்க அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார்.பிரகாரத்தில் உள்ள இந்தக் கிணறு மகாமகக் கிணறு என அழைக்கப் படுகிறது.மகாமகம் போது சௌமிநாராயணர் கருடன் மீது எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்

இரண்யகசிபை அழிக்கும் பொருட்டு...நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தில் பெருமாள் எழுந்தருளினார்.தேவர்களும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவர்களும் விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்று, கிடந்த, இருந்த,நடந்த என நாங்கு கோலங்களை காட்டி அருளினார்.தேவர்களின் திருக்கை (துன்பததை) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் ஆயிற்று

கோயில் பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார்.கோயில் முகப்பில் சுயம்புலிங்கம் உள்ளது.அஷ்டாங்க விமானத்தில் வலப்பக்கத்தில் நரசிம்மரின் அருகில் ராகு, கேது உள்ளனர்

பெரியாழ்வார்,திருமங்கையாழ்வார்,திருமழிசைஆழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்தத் தலம் இது.


No comments:

Post a Comment