லோகநாதப் பெருமாள் கோயில்
மூலவக்ர் - லோகநாதர், சியாமளமேனி பெருமாள்
உற்சவர் - தாமோதர நாராயணன்
தாயார் - லோகநாயகி
உற்சவர் - அரவிந்தவல்லி
தீர்த்தம் - ராவணபுஷ்கரணி
விருட்சம் - மகிழம்
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்
நாகப்பட்டினம்...சிக்கலுக்கு அருகில் அமைந்துள்ள ஊர் திருக்கண்ணங்குடி
நாகப்பட்டினம் - திருவையாறு சாலையில் சிக்கலிலிருந்து 2கிலோமீட்டர் தூரத்தில் இக்கோயில் உள்ளது.
இங்கு லாகநாதப்பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சித் தருகிறார்.
வசிஷ்ட முனிவர் வெண்ணெயால் கிருஷ்ண விக்கிரகம் ப்ன்று செய்து வழிபட்டுவந்தார்.அவரது பக்தி காரணமாக அது உருகாமல் இருந்து வந்த்து.ஒருநாள் கிருஷ்ணர் வசிஷ்டர் வீட்டினுள் சிறுவனாக நுழைந்து வெண்ணெய் விக்கிரகத்தை சாப்பிட்டு விட்டு வெளியே ஓடி விட்டார்.ஓடிய சிறுவனை வசிஷ்டர் துரத்திச் சென்றார் வசிஷ்டர்.சிறுவன் ஓடிய வழியில் சில முனிவர்கள் ஒரு மகிழ மரத்தடியில் கிருஷ்ணனை தியானம் செய்து கொண்டிருந்தனர்.ஓடி வந்த சிறுவன் கிருஷ்ணன் தான் என முனிவர்கள் அறிந்தனர்.சிறுவனும் அவர்கள் பக்தியில் மகிழ்ந்து அவர்களுக்கு ஒரு வரம் தருவதாக சொன்னார்.முனிவர்களும் அவரை அவ்விடத்திலேயே தங்குமாறு வேண்டினார்.அவரும் அப்படியேத் தங்கி விட்டார்.
ஓடி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணனின் லீலையை அறிந்து கொண்டார்.இச்சிறப்பு நடந்ததாகக் கூறப்படும் தலம் இது.
No comments:
Post a Comment