Monday, June 6, 2016

14 - கும்பகோணம் (சாரங்கபாணி சுவாமி கோயில்)

 
                                    சாரங்கபாணிக் கோயில் தேரோட்டம் (உள்படம்- சாரங்கபாணி)


ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாகப் போற்றப்படும் இத்திருத்தலத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தம் விளைந்ததாகக்  கருதப்படும் பெருமையை உடையது.ஆழ்வார்கள், இப்பெருமாளை குடந்தைக் கிடந்தான் என வர்ணயிக்கின்றனர்.இக்கோயிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார்.திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. (மற்றவை ஸ்ரீரங்கப்பட்டிணம்,ஸ்ரீரங்கம்,திருப்பேர் நகர்,மயிலாடுதுறை)

கும்பகோணத்தில் உள்ள மிகப்பழைமையான கோயில் இது.இக்கோயிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது.அதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும் கல்லால் ஆனவை.இக்கல்தேர் ஒரு சிறந்த, அற்புத கலைப்படைப்பு எனலாம்.இக்கோயிலின் மற்ற சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லின் சிறப்புப் பெயராகும்.பாணி என்றால் கையில் ஏந்தியவன் என்று பொருள்.

தவிர்த்து, சாரங்கம் என்பது பல பொருள்களையுடைய சொல்லாகும்.சாரங்கபாணி என்றால் மானை ஏந்திய சிவன் என்றும் பொருள் கொள்ளலாம்.சாரங்கபாணி என்பது நேராக திருமாலைக் குறிக்காது.ஆனாலும்..சார்ங்கபாணி என பெருமாளை உச்சரித்த மக்கள் சாரங்கபாணி என்றே அழைக்க ஆரம்பித்தனர் எனலாம்

இக்கோயிலின் முன்மண்டபத்து தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர மன்னர் விருப்பண்ண உடையாருக்கு உரியதாகும்.இக்கல்வெட்டின் காலம் கிபி 1385. இக்கல்வெட்டில்தான் முதன்முறையாக இவ்வூர் கும்பகோணமென உள்ளதெனலாம் (குடந்தை என்பதே இதன் பெயராகும்)

மூலவர் - சாரங்கபாணி(ஆராவமுதன்)
உற்சவர்- நான் கு   திருக்கைகளுடன் , சங்கு, சக்கரம்,கதை, சார்ங்கம் என்னும் வில்,உடைவாள் ஆகிய ஐந்து ஆயுடஹ்ங்களுடன், வலது கை அபயமளிக்கும் முத்திரையுடன் கம்பொன் சுடராக வேறு எங்கும் காணக்கிடைக்கா அழகுடன் காணப்படுகிறார்.

மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்தரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
நாபியில் பிரம்மா...தலைப்பகுதியில் சூரியன்
கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

தாயார் - கோமளவல்லி

தீர்த்தம் - ஹேமவல்லி புஷ்கரிணி. காவிரி, அரசலாறு

பன்னிரு ஆழ்வார்கள், ஆண்டாள், திருமழிசையாழ்வார்,திருமனகையாழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார் ஆகியோர் இப்ப்ருமாளைப் பாடியுள்ளார்கள்

பெரியாழ்வார்....

தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட
வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று
நீ நிலா, நின் புகழா நின்ற ஆயர்தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி
குடந்தை கிடந்தானே சப்பாணி

    என பாடியுள்ளார்.

இக்கோயிலின் தேர் சித்திரைத் தேர் என அழைக்கப்படுகிறது.தமிழகத்துக் கோயில்களில் இது மூன்றாவது பெரிய தேர் ஆகும்

திருவாரூர் ஆழித்தேர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேருக்கு இணையாகப் புகழ் பெற்றது.இதன் எடை 500 டன்.அடிப்பாகம் 25 அடி.மேல்தட்டு 35 அடி, உயரம் 30 அடி.அலங்கரிக்கும் போது தேர் 110 அடியாகும்.11 நிலைகளைக் கொண்டது இத்தேர்

No comments:

Post a Comment