Friday, June 24, 2016

38 - திருக்காவளம்பாடி

                                   
கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில்

இறைவன்  - கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்)

தாயார் - மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்

தீர்த்தம் - தடமலர்ப் பொய்கை

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது.திருநகிரியிலிருந்து நடக்கும் தூரம்

கண்ணன், சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனை அழித்தான்.இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருள்களை மீட்டு அவர்களுக்கேத் தந்தான்.வெகுநாளைக்குப் பின்னர், இந்திரன் தோட்டத்தில் இருந்த பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க,கண்ணன் இந்திரனிடம் கேட்க, இந்திரன் கொடுக்க மறுத்தான்.இதனால் கோபமுற்ற கண்ணன் அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழில்) அழித்தான்.பதினோரு எம்பெருமாங்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணன் தான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி இந்த காவளம்பாடியில் கோயில் கொண்டான் என தல வரலாறு சொல்கிறது.தாயாருக்கு என இங்கு தனி சந்நிதி இல்லை.

திருமங்கையாழ்வார் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்களுக்கு அன்னதானம் செய்த மங்கைமடம் மிக ருகிலேயே உள்ளது.

பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.

No comments:

Post a Comment