Friday, June 10, 2016

19 - திருநாகை

                                           


சவுந்தரராஜப்பெருமாள் கோயில்

பெருமாள் - சௌந்தரராஜ பெருமாள்
உற்சவர்- சவுந்தரராஜன்
தாயார் - சவுந்தரவல்லி
உற்சவர் - கஜலட்சுமி
தலவிருட்சம்- மாமரம்
தீர்த்தம் - சார புஷ்கரணி

புராணப் பெயர்கள் - சௌந்தர்ய ஆர்ணயம், சுந்தராரண்யம்

மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் செல்லும்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த இடம்

இத்தலத்தில் பெருமாள் நின்று,கிடந்த இருந்த கோலத்தில் நரசிம்மராக அருள்பாலிக்கிறார்.ஒருகை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது.மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன.

பெருமாள் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் திருமஞ்சன திருமேனியுடன் காட்சி தருகிறார்.இங்குள்ள விமானம் சௌந்தர்ய விமானம்.இங்கு ஆதிக்ஷேஷன், துருவன், திருமங்கையாழ்வார்ம்சாலிசுகசோழன் ஆகியோர் பெருமாளைத் தரிசித்துள்ளனர்.

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டால் ஆன மாலை பெருமாளின் இடையை அலங்கரிக்கிறது.ஆதிக்ஷேஷனால் உருவாக்கப்பட்ட சாரபுஷ்கரணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

கண்டன்,சுகண்டன் என்று இரு சகோதரர்கள் செருக்குடன் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.அவர்கள் சாரபுஷ்கரணியில் நீராட பாவம் தீர்ந்து வைகுண்டம் சென்றார்கள்.இவர்களது சிற்பங்கள் பெருமாள் சந்நிதியில் உள்ளன.

உத்தானபாத மகராஜனின் குமாரன் துருவன் சிறுவனாய் இருந்த போது, நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான்.உலகமே தனக்கு அடிமையாக வேண்டும் என பெருமாளை தரிசித்து தவம் செய்தான்.பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகுடன் அவனுக்குத் தரிசனம் தந்தார்.பெருமாளின் அழகில் மயங்கிய துருவன் தான் கேட்க இருந்த வரத்தை மறந்தான். இறைவனது அழகே பெரும் சுகம். எப்போதும் அதை தரிசிக்கும் பாக்கியம் வேண்டும் என்று கேட்டான்.பெருமாள் தனது சௌந்தர்யமான கோலத்தை துருவனுக்குக் காட்டி அவன் தங்கியிருந்த தலத்திலேயே தங்கினார்.சௌந்தரராஜ பெருமாள் ஆனார்.

நாகங்களுக்குத் தலைவனான ஆதிஷேசன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி சார புஷ்கரணி எனப் பெயரிட்டான்.அதன் கரையில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவம் செய்தான். பெருமாளும் மகிழ்ந்து தன் படுக்கையாக ஆதிக்ஷேசனை ஏற்றார்.பெருமாலை நாகம் (ஆதிக்ஷேசன்) ஆராதித்ததால் ஊருக்கு நாகப்பட்டினம் என்ற பெயர் வந்தது. 

No comments:

Post a Comment