Tuesday, June 7, 2016

15 - கண்டியூர்


                                   

ஹரசாப விமோசன பெருமாள் - கமலநாதன்

உற்சவர் - கமலநாதன்
தாயார்- கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்- கபால மோட்ச புஷ்கரிணி

புராண பெயர் - கண்டன க்ஷேத்திரம், பஞ்சகமல க்ஷேத்திரம்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.இத்தலத்தில் பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இத்தல இறைவன் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.இவர் சந்நிதியில் மேல் உள்ள விமானம் கமலாக்ருதி விமானம் எனப்படுகிறது. அகத்தியர், இத்தல இறைவனை தரிசனம் செய்துள்ளனர்

சிவனுக்கு, ஈசானம், தத்புருஷம்,அகோரம்,வாம தேவம்,சத்யோஜாதம் என ஐந்து திருமுகங்கள் உண்டு.இதுபோல பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது.அதனால் சிவனுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தான்.இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத்தலையை கிள்ளி எறிந்தார்.இந்த பிரம்மஹத்தி தோஷத்தைத் தொலைக்க கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார்.ஒரு இடத்தில் அந்த கபாலம் வீழ்ந்தது.அங்கே விஷ்ணு இருந்தார்.அந்தத் தலமே பூர்ணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோயிலாகும்.

சிவனின் சாபம் தீர்ந்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்" என்று அழைக்கப்படுகிறார்.இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது.இதே ஊரில் சிவபெருமானும் குடிகொண்டார்.அவருக்கு கண்டீஸ்வரர் எனப் பெயர்.

பிரம்மனுக்குக் கோயில் கிடையாது என்பதால் கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதரமாக பிரம்மன் உள்ளார். 

No comments:

Post a Comment