Friday, June 24, 2016

37 - திருமணிக்கூடம்

                                       


வரதராஜப் பெருமாள் கோயில்

திருமணிக்கூடம் திருநாங்கூருக்கு கிழக்கே அரை மைல் தொலைவிலேயே உள்ளது.திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று

திருமணிக்கூடம்....பெயருக்கு ஏற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.பதினோரு திருப்பதி பெருமாள்களும் எழுந்தருளும் தைஅமாவாசைக்கு மறுநாள் கருடசேவைத் திருவிழாவிற்கு இத்தலப் பெருமாளையும் எடுத்துச் செல்வர்

கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் இறைவன் இங்கு அருள்பாலிக்கிரான்.தாமரை பீடத்தி மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு, சக்கரமும் முன் கைகளில் அபய, ஊரு முத்திரைக் காட்டியபடி அருள்பாலிக்கிறார்.வலது புறத்தில் தாமரை பீடத்தின் மீது நின்றபடியே இடது கரத்தில் தாமரை மலரும், வலது கரத்தைத் தொங்கவிட்டபடியும் ஸ்ரீதேவி காட்சியளிக்கிறார்.இடது புறத்தில் பூமாதேவி வலது கரத்தில் தாமரை மொட்டும் ,இடது கரத்தைத் தொங்க விட்டபடியும் இருக்கிறார்.

அர்த்த மண்டபத்தில் நம்மாழ்வார் அமர்ந்த நிலையில் உள்ளார்.

இறைவன் - வரதராஜப் பெருமாள், கஜேந்திர வர்மன்,மணிக்கூட நாயகன்

தாயார்- திருமாமகள் நாச்சியார், (ஸ்ரீதேவி) மற்றும் பூதேவி

தீர்த்தம் - சந்திர புஷ்கரணி

No comments:

Post a Comment