திரு விக்கிரன் திருக்கோயில்
இத்தலம் சீர்காழியில் உள்ளது.
மூலவர் - திருவிக்கிர நாராயணர்
உற்சவர்- தாடாளன்
தாயார்- லோகநாயகி
தல விருட்சம் - பலா
தீர்த்தம் - சங்க புஷ்கரணி, சக்கர தீர்த்தம்
ஆண்டாள், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தலம்
உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திருவிக்கிரம அவதாரக் காட்சிகளைக் கண்ட திருத்தலம்
மூலவர் திருவிக்கிரமராக இடதுகாலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும், வலது கையை தானம் பெற்ற கோலத்திலும்,இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.உற்சவர் தாடாளன் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே காட்சித் தருகிறார்
திருவிக்கிரம கோலத்தில் ஒரு பாதத்தைத் தூக்கியபோது பாதம் நோகுமே என அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு.
திருமங்கையாழ்வாருக்கும், திருஞானசம்பந்தருக்கும் இடையிலான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால் பாராட்டி தன் வேலை திருஞானசம்பந்தர் அளித்தத் தலம்
(திருவாலி திருநகிரி திருத்தலத்தில் இவ்வேலை வைத்தபடி திருமங்கையாழ்வார் காட்சித் தருகிறார்0
No comments:
Post a Comment