Wednesday, June 22, 2016

34 - திருவண் புருடோத்தமம்


                                               

திருவண்புருடோத்தமம் கோயில்

திருநாங்கூர் திருத்தலங்களில் திருவண்புருடோத்தமம் பெருமாள் கோயிலும் ஒன்றாகும்.சீர்காழிக்குக் கிழக்கே ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்லது.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும்

பெருமாள் - புருடோத்தமன்

தாயார்- புருடோத்த்ம நாயகி

தீர்த்தம் - திருப்பாற்கடல் தீர்த்தம்

தமிழ்நாட்டில் உள்ள வைணவத்திருத்தலங்களில் புருடோத்தமன் (புருஷோத்தமன்) என்ற பெயரில் இறைவன் எழுந்தருளியுள்ளது இங்கு மட்டுமே! இறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண்புருஷோத்தமம்என்று ஆயிற்று

மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளனர்.திருநாங்கூர் பதினோரு திருப்பதி பெருமாள்களும் இங்கு எழுந்தருளும் தைஅமாவாசைக்கு அடுத்த நாள் திருநாங்கூர் கருட சேவைக்கு திருநாங்கூருக்கு இப்பெருமாளும் செல்வார்.

வியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் பெருமாளுக்கு பூமாலை சூட்டும் வேலையை மேற்கொண்டிருந்தார்.இக்கோயில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தன் குழந்தை உபுமன்யுவை உட்காரவைத்துவிட்டு பூப்பறிக்கச் சென்றார்.குழந்தை பசியால் அழுதது.புருடோத்தம நாயகி தூண்ட, வண்புருஷோத்தமர் திருப்பாற்கடலை வரவழித்து குழந்தைக்கு பாலைப்புகட்டி அருள் புரிந்து வியாக்ரபாத முனிவருக்குக் காட்சி தந்தார் என்பது இத்தலத்தோடு பேசப்படும் வரலாறாகும்.

இறைவன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 

No comments:

Post a Comment