Monday, June 27, 2016

41 - அழகர் கோயில்

                             



இத்தலம், மதுரையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.திருமாலிருஞ்சொலை என அழைக்கப்படும் இக்கோயில், பெரியாழ்வார்,ஆண்டாள்,பேயாழ்வார்,திருமங்கையாழ்வார்,பூதத்தாழ்வார்,நம்மாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டத்தலமாகும்.இவர்கள் மொத்தமாக சேர்த்து 108 பாடல்களை இத்தலம் குறித்து பாடியுள்ளனர்.

இத்தலம், சோலைமலை,திருமாலிருஞ்சோலை,மாலிருங்குன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார்.உற்சவர் அழகர் அல்லது சுந்தராசப் பெருமாள் ஆவார்.

பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள்,மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோர்களால் இக்கோயில் திருப்பணி செய்யப் பட்டுள்ளது.

மூலவரின் கருவறை விமானம் சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்ரும் இசைத்தூண்கள் உள்ளன.இசைத்தூணின் உச்சியில் உள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்கமுடியாதவாறு உள்ளது.
வசந்த மண்டபத்தில், ராமாயண, மகாபாரத  நிகழ்ச்சிகள் அழகிய ஓவியங்களாக உள்ளன.இராயகோபுரம், திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது.அழிந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் போற்றத் தக்கது.

கோயிலைச் சுற்றி உள்கோட்டை மற்ரும் வெளிக்கோட்டை  எனப்படும் இரணியங்கோட்டை அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.

அழகர்கோயிலின் அடிவாரத்திலிருந்து 3 கிலோ  மீட்டர்  தொலைவில் ராக்காயி அம்மன் நூபுரகங்கை நீரூற்று உள்ளது

அழகர்கோயில் அடிவாரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலை வில் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை உள்ளது

கள்ளழகர், மீனாட்சி அம்மனின் உடன் பிறந்தவர்.சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர், அழகர்கோயிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார்.வைகை ஆறுவரை வந்து வண்டியூர் சென்று அழகர்மலை திரும்புகிறார்.

                                               

                                                           கள்ளழகர்

திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றிலிறங்கும் விழா சித்திரை மாதம் முழுநிலவன்று மதுரையை அடுத்த தேனூரில் நடைபெற்றது.திருமல நாயக்கர் காலத்தில் கள்ளழகரை வைகை ஆற்றில் எழுந்தருளச் செய்து மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தப்பட்டது.சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை எதிர்சேவை என்று கொண்டாடப்படுகிறது

சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுரகங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும் போது எதிர்ப்பட்டதுர்வாசமுனிவரைக் கவனிக்காமல் இருக்க, அதைக் கண்ட துர்வாச முனிவர் , சுதபரை மண்டூகமாக (தவளையாக) இருக்க சாபமிட்டார்.சாபம் நீங்க சுதப முனிவர் வைகையாற்றில் நீண்ட காலம் தவமிருக்க திருமாலால் சாபம் நீங்கப் பெற்றார்.முனிவர் அங்கு வணங்கியவரே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும், அழகர், மாலிருஞ்சோலை னம்பி என்று தமிழிலும் அழைக்கப்பட்டார்

கோயில் பிரகாரத்தில் உள்ள ஜ்வாலாயோக நரசிம்மர் உக்கிர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்கிரத்தைத் தவிர்க்க தினமும் தண்ணீர்,தயிர், வெண்ணெய்,தேன் முதலியவற்றால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது).ஜ்வாலாயோக நரசிம்மரின் கோபத்தைத் தணித்து சாந்தி அடைவதற்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிக்கூரை திறந்த நிலையில் உள்ளது.மகாவிஷ்ணு கோயிலில் நரசிம்மர் மூலவரின் இடது ஓரத்தில் இருப்பார்.இங்கு மூலவருக்கு நேர் பின்புறமுள்ளார்

மூல்வர் - அழகர் அல்லது அழகிய தோளூடையான் (வடமொழியில் சுந்தரபாஹூ)

தாயார்- சுந்தரவல்லி

கிழக்கே திருமுக ம்ணடலம்

தீர்த்தம் - நூபுர கங்கை எனும் சிலம்பாறு

உற்சவர்- கள்ளழகர்

அழக்ர்மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகிறது.அரிசி, உளுந்து,மிளகு, சீரகம், நெய் கலந்து தோசை தயாரிக்கப்படுகிறது

No comments:

Post a Comment