Sunday, June 26, 2016

40 - திருப்பார்த்தன் பள்ளி

                               



தாமரையாள் கேள்வன் கோயில்


இத்தலம் சீர்காழி அருகில் திருவெண்காட்டிலிருந்து அரைமைல் தூரத்தில்  அமைந்துள்ளது.திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. பார்த்தனுக்காக (அர்ச்சுனன்) உண்டான கோயில் ஆனதால் பார்த்தன் பள்ளியாயிற்று.அர்ச்சுனனுக்கும் இங்கு ஒரு கோயில் உண்டு.

வருணன், இங்கு திருமாலைக் குறித்து தவமிருந்து தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்க வேண்ட, அப்படியே நடந்தபடியால் பார்த்தசாரதிபள்ளியென வழங்கி, பின்னர் பார்த்தன்பள்ளி ஆயிற்று.பதினோரு திருப்பதிகளின் இறைவர்களும் தை அமாவசைக்கு இங்கு எழுந்தருளி   மறுநாள்  திருநாங்கூர் கருட சேவைக்கு எடுத்துச் செல்லப்படுவர்.

தனியாக யாத்திரை மேற்கொண்ட அர்ச்சுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட வந்த போது புரசங்காடு எனும் வனப்பகுதியை அடைந்தான்.அப்போது, தாகம் எழ நீர் தேடிச் சென்றபோது...அகத்தியர் ஆசிரமம் வந்த அர்ச்சுனன் அவரிடம் தண்ணீர் கேட்க...அகத்தியரும் தன் கமண்டலத்திலிருந்த் நீரைப் பருகக் கொடுத்தார்.ஆனால், அர்ச்சுனனால் அருந்த இயலாதவாறு நீர் மறையவே  வருந்தினான்.அகத்தியர் தனது ஞானதிருஷ்டியால் காரணத்தைக் கண்டறிந்தார்.

பல்வேறு சோதனைகளிலும் காத்த கண்ணனை நினையாது, என்னிடம் நீர் கேட்டது பொறுக்காததால் கண்ணன் செய்த லீலை இது எனக்கூற...அர்ச்சுனன் கண்ணனை நினைத்து வேண்ட கண்ணன் தரிசனம் கொடுத்து, கத்தியால் பூமியைக் கிளறச்சொல்லி, அதிலிருந்து நீர் வந்தது.அர்ச்சுனன் தாகம் தணிந்தான்

இறைவன் - மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் தாமரையாள் கேள்வன்
உற்சவர்- பார்த்தசாரதி
தாயார் - தாமரை நாயகி, ஸ்ரீசெங்கமவல்லி
தீர்த்தம்- சங்க சரஸ்

(திருநாங்கூர் பதினோரு திருப்பதிகள் எனக் கூறப்படும் தலங்கள்

திருக்காவளம்பாடி
திருவண்புருடோத்தமம்
திரு அரிமேய விண்ணகரம்
திருச்செம்பொன் செங்கோயில்
திருமணிமாடக் கோயில்
திரு வைகுந்த விண்ணகரம்
திருத்தேவனார்த் தொகை
திருத்தெற்றியம்பலம்
திருமணிக்கூடம்
திருவெள்ளக்குளம்
திருப்பார்த்தன் பள்ளி)

No comments:

Post a Comment