Saturday, June 18, 2016

28 - கபிஸ்தலம்

                               
                                 

கஜேந்திர  வரதப் பெருமாள் கோயில்

கும்பகோணம்  -  திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கபிஸ்தலம்.

மூலவர்- கஜேந்திர வரதர் (விஷ்ணு)

உற்சவர் - தாமோதர நாராயணன்

தாயார் - ரமாமணி வல்லி

உற்சவர் தாயார்_ லோகநாயகி

தீர்த்தம் - கஜேந்திர புஷ்கரணி (கபில தீர்த்தம்)

விருட்சம் - மகிழம்

திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த தலம்

கஜேந்திர வரதப்பெருமாள் ஆதிமூலம் என்றும் அழைக்கப் படுகிறார்.இங்கு புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிக் காட்சித் தருகிறார்.

கபி என்றால் குரங்கு என்று பொருள்.இத்தலத்தில் ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்றார்...ஆகவே இத்தலம் கபிஸ்தலம் என்று பெயரைப் பெற்றது.

இந்திரஜ்யும்னன் என்ற  அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான்.ஒருசமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார்.அரசர் அவரது வருகையை அறியவில்லை.தன்னை அரசர் அவமதித்து விட்டதாகல் கோபம் கொண்ட முனிவர் "முனிவர்கலை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்" என சாபம் கொடுத்துவிட்டார்.

மன்னன் தன்னை மன்னிக்குமாறு கூற.."திருமால் மீது பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாகப் பிரந்து திருமால் மூலமாக சாப விமோசனம்" அடைவாய் என்று கூறினார்.

ஒரு குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன் குளத்தில் குளிக்க வருபவரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான்.ஒருநாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுக்க அவர் அவனை முதலையாக்கி சாபம் கொடுத்தார்.அரக்கன், தன்னை மன்னிக்குமாறு அகத்தியரை வேண்ட திருமால் முளம் சாப விமோசனம் கிடைக்கும்" என்று கூறினார்.

யானைகளின் அரசனான கஜேந்திரன் வழக்கம் போல விஷ்ணுவை வழிபட தாமரைப் பூ எடுக்க அக்குளத்திற்குச் சென்ற போது, முதலையாக அங்கு இருந்த அரக்கன் கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டான்.காலை விடுவித்துக் கொள்ள முடியாத கஜேந்திரன், திருமாலை  வேண்டினான் "ஆதிமூலமே! என்னைக் காப்பாற்று" என அலற, திருமாலும் காட்சி தந்து முதலையை தனது சக்ராயுதத்தால் கொன்று யானையைக் காப்பாற்ரினார்.முதலை, யானை இரண்டுமே சாப விமோசனம் பெற்றன.

இவ்வாறு யானைக்குத் திருமால் அருளிய தலம் கபிஸ்தலம் ஆகும்.ஆஞ்சநேயருக்கும் அருள்பாலித்தத் தலமாகும்.

No comments:

Post a Comment