Sunday, June 19, 2016

29 - திருவெள்ளியங்குடி

                                         


கோலவல்லி ராமர் திருக்கோயில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது இக்கோயில்

மூலவர் - கோலவில்லி ராமர், ஸ்ரீராப்திநாதன்

உற்சவர் - சிருங்கார சுந்தரர்

தாயார் - மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)

தலவிருட்சம் - செவ்வாழை

தீர்த்தம் - சுக்கிர தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்,பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்

திருமங்க்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

பெருமாளின் 108 திருத்தலங்களில் இங்கு மட்டும் கருடாழ்வார் சங்கு,சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம்.பெருமாள் கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார்.சோழர்களால் கட்டப்பட்டது இக்கோயில்.சுக்கிரன், பிரம்மா, மயன் ஆகியோர் இத்தல இறைவனை தரிசித்துள்ளனர்.

தனக்குக் கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.ஆகவே இத்தலம் நவக்கிரகத் தலங்களில் சுக்கிரத் தலமாகப் போற்றப்படுகிறது.

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க, வந்தது இறைவன் என்றறியாத மன்னனும் சம்மதிக்க..ஆனால், உண்மை நிலை அறிந்த சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை...வண்டாக உருவெடுத்து அடைத்துவிட்டார்.இந்தச் செயலை அறிந்தபகவான் , ஒரு குச்சியால் துவாரத்தைக் குத்த, ஒரு கண்ணை இழந்தார் சுக்கிராச்சாரியார்.சுக்கிரன் ஒரு கண் இழ்ந்த நிலையில் பலத் தலங்களில் வழிப்பட்டு இங்கு மீண்டும் பார்வையினைப் பெற்றார்.இதனால் இத்தலம் வெள்ளி (சுக்கிரன்)யங்குடி என்றானது

தவிர்த்து, தேவ சிற்பியான விஸ்வகர்மா, பெருமாளுக்கு அழகிய கோயில்களைக் கட்டி முடித்ததைப் பார்த்த, அசுரகுல சிற்பி மயன், தன்னால் கட்டமுடியவில்லையே என வருத்தப்பட்டு பிரம்மனை வேண்டினான். பிரம்மனும், இத்தலம் பற்றிக் கூறி இங்கு மயனை பெருமாளை வேண்டி தவம் இருக்கச் சொன்னான்.பெருமாள், சங்கு சக்கரத்துடன் மயனுக்கு தரிசனம் தர, மயனோ, தனக்கு ராம அவதாரமாய் காட்சித் தர வேண்டினான்.தன் கரத்திலிருந்த சங்கு, சக்கரத்தை, கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு பெருமான் கோலவில்லி ராமனாக அம்புகளுடன் காட்சி தந்தார்.

No comments:

Post a Comment