Wednesday, May 31, 2017

51- வானமாமலை



புராண பெயர்கள்

நாங்குநேரி
தோத்தாத்ரி
ஸ்ரீவரமங்கை(சீரிவரமங்கலநகர்)
நாகணை சேரி

இறைவன் - தோத்தாத்ரிநாதன்
இறைவி- ஸ்ரீதேவி,பூமி தேவி
தீர்த்தம்- சேற்றுத்தாமரை தீர்த்தம்

பிரத்யட்சம் உரோம (ரிஷி) முனிவர்

இது ஒரு சுயம்புத் தலமாகும்

இத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி,தோத்தாத்ரி,ஸ்ரீவரமங்கை நகர் என்று பல பெயர்கள் உண்டு

பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம்,நரசிம்மபுராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது

உரோம ரிஷி தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமக்ஷேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்ததால் ஸ்ரீவரமங்கல நகர் எனவும், ஆதிசேஷன் இங்கு தவமிருந்து திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலால் வானமாமலைஎனவும், இங்குள்ள குளத்தை நான் கு ஏரிகளாக வெட்டியதால்..நான் கு ..ஏரி...நாங்குநேரி எனவும், அந்த நாங்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப்பகுதியில் அமைந்ததால் நான் கூர் ஏர்  என்பது நாங்குநேரி ஆனது என்றெல்லாம் கூறப்படுகிறது

இங்கு இறைவனுக்கு தினமும் தைல அபிஷேகம் நடைபெறும்.அந்த எண்ணெய்யை எடுத்து இங்குள்ள நாழிக் கிணற்றில் ஊற்ரி வருகின்றனர்.இந்நாழிக் கிணற்றில் உள்ள எண்ணையை உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை

ஸ்ரீவானமாமலை மண்டபத்திற்கு இதுவே தலைமைப் பீடமாகும்.நம்மாழ்வார் மட்டும் இத்தலம் பற்றி 11 பாக்கள் பாடி மங்களாசசனம் செய்துள்ளார்.

இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது 

Tuesday, May 30, 2017

50-திருத்துலைவில்லி மங்கலம் (நவ திருப்பதி)



புராணப் பெயர் திருத்துலைவில்லி மங்கலம்

தேவர்பிரான் திருக்கோயில் (தெற்கு கோயில்..ராகு அம்சம்)

மூலவர்- ஸ்ரீஅரவிந்த  லோசனன் (செந்தாமரைக் கண்ணன்)

தாயார்- கருந்தடக்கண்ணி நாச்சியார்

தீர்த்தம்- அஸ்வினி தீர்த்தம் (அசுவனி தேவர்கள் நீராடிய தீர்த்தம்

பிரத்யட்சம்- அஸ்வினி ,தேவர்கள்,சுப்ரபர்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்

இது இரட்டைத் திருப்பதி எனவும் வழங்கப்படும் தலமாகும்

திருத்துலைவில்லி
மங்கலம்
(திருத்தொலைவில்லி மங்களம்)
இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து, ஒரு திவ்வியத் திருத்தலமாகக் கருதப் படுகிறது.ஆயினும், நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலமாகிறது

இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது

ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுதபோது ஒளிரும் வில்லையும், தராசையும் கண்டு வியப்புற்று கையில் எடுக்க , அவை சாபவிமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உரு பெற்றன.
குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர்.இதனாலேயே இவ்வூர்,துலை,வில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது

பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட பெருமாள் காட்சித் தந்தார்.தேவப்பிரான் என்ற பெயரும் பெற்றார்

இத்தலம் இரட்டத் திருப்பதியில் தெற்குத் திருக் கோயில்.ராகு அம்சம் திருக்கோயில்..

திருத்துலைவில்லி அரவிந்தலோசனன் திருக்கோயில்
-----------------------------------------------------------------------------------------

தினந்தாறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர்.இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை எங்கிருந்து கொண்டு வருகிரார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்க வரும் போது, பின் தொடர்ந்து வரும்போது, சுப்ரரர் காரணத்தைக் கேட்டார்.செந்தாமரை மலர்கள் கொண்டு வந்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும், அங்கேயே தமக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் பெருமாள் கூறினார்

இத்தலம் இரட்டத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில்

Monday, May 29, 2017

49- ஆழ்வார் திருநகரி (நவ திருப்பதி)



ஆழ்வார் திருநகரி..ஆதிநாதன் கோயில்

இந்த ஊர்  திருக்குருகூர் எனவும் வழங்கப்படுகிறது

மூலவர் - ஆதி நாதன்

தாயார்- ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி

தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், திருச்ச்ங்கண்ணி துறை

பிரதியட்சம்- பிரம்மா, மதுரகவியாழ்வார்,நம்மாழ்வார்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

நம்மாழ்வார் அவதரித்தத்தலம்.தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இத்தலம் பிரம்மாவிற்குக் குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால்குருகூர் எனப்படுகிறது .ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என்னும் திருப்பெயர் பெற்றார்.

நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிஷேசன்.தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில், எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தம்பியான இலக்குவனிடம் ராமபிரான் கூறியிருந்தார்

அப்போது வந்த துர்வாசரை அனுமதிக்க இலக்குவன் தயங்குகையில், அவர் அவனை புளிய மரமாகப் பிறப்பெடுக்குமாறு சபித்து விட்டார்

அதனால், இத்தலத்தில் இலக்குவன் புளியமரமாகி விட, அவனது வேண்டுகோலுக்கு இணங்கி ராமன் பின்னாளில் நம்மாழ்வாராக அவதரித்து, அப்புளியமரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால்..இத்தலம் ஷேச க்ஷேத்திரம் என விளங்குவதாகக் கூறுவார்கள்

Saturday, May 27, 2017

48- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்



இது பழமையானதும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்தத் தலமாகும்

வேறு பெயர்கள் -  வன்புதுவை,ஸ்ரீதன்விபுரம்,திருவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இத்தலம்

இப்பகுதி மல்லி  என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது.வில்லி காட்டைத் திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமாக்கினான்.அதனால் வில்லிபுத்தூர் என்ற பெயர் உருவானது.ராணி மங்கம்மாள் தன் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் கோயில்களுக்கு பல திருப்பணிகளைச் செய்துள்ளாள்

முன்னொருகாலத்தில் இப்பகுதி வராக சேத்திரம் என அழைக்கப்பட்டது,ஷேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது.அதில் வில்லி,கண்டன் என இரு வேடுவ சகோதரர்கள் இருந்தனர்.அவர்கள் ஒருநாள் வேட்டையாடிவிட்டு வரும் போது கண்டன் புலி ஒன்றைத் துரத்திச் செல்கிறான்.அவனை புலி கொன்று விடுகிறது.இதை அறியாத வில்லி தன் சகோதரனைத் தேடி அலைகிறான்.சோர்வடைந்தவன் ஒரு மரத்தின் நிழலில் உறங்கி விடுகிறான்.அப்போது, அவன் கனவில் பெருமாள் தோன்று, கண்டனுக்கு ஆன நிலையைக் கூறுகிறார்.பின்னர் அவர் தாம் அங்கு "காலநேமி" என்ற பெயரில் இருக்கும் அசுரனை வதம் செய்ய எழுந்தருளியுள்ளதாகவும், பின்னர் ஆல்மரத்தடியிலுள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்ற திருநாமத்துடன் காட்சியளிக்கப் போவதாகவும் கூறி,இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்குக் கோயில் எழுப்பி ஆராதனை செய்து வருமாறு கூறி மறைகிறார்.அதனால், இவ்வூருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயர் வந்ததாக புராணம் கூறுகிறது

ஸ்ரீவரபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோவில் ஆகும்.இக்கோவில் கோபுரம் 192 அடி உயரமானது.இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப் பூர்வ சின்னம் ஆகும்.இக்கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது.ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையான இவர், தனது மருமகனான பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டியதாகவும் கூறுவர்.அவர், பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றி கொண்டு, அதனால் தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார்

இக்கோவிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகக் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுகிறது.நல்லெண்ணெய்,பசும்பால்,நெல்லிக்காய்,தாழம்பூ,இளநீர் ஆகிய பல பொருட்களைச் சேர்த்து ஏழுபடி எண்ணெய் விட்டு இரண்டு பேர் 40 நாட்கள் காய்ச்சுவர்.இதில் 4 படி தைலம் கிடைக்கும்.மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இத்தைலமே சாற்றப்படுகின்றது.மார்கழி மாதம் முடிந்ததும் பக்தர்களுக்குப் பிரசாதமாக இத்தைலம் கொடுக்கப் படுகிறது.பக்தர்கள் நோய்த் தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது


18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர்  பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கலைநயமிக்க மர சிற்பங்களும்,ஒன்பது மரச் சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அல்ங்கார பதாகைகளும், அதன் உச்சியில் ஐந்து பகுதி இணைக்கப்பட்ட கும்ப கலசமும் பட்டு கொடியும்  , ஒன்பது பெரிய வடமும் அமையப் பெற்றது.பத்து கிலோமீட்டர் தேரை மக்கள் பிடித்து இழுப்பர்

காலப்போக்கில் மரச் சக்கரங்கள் சேதமுற்றதால், தேர் 18 ஆண்டுகள் ஓடாமல் இருந்தது.

தற்போது மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து இரும்பு அடிசட்டம், விசைத்தடையுடன் கூடிய நான் கு  இரும்பு சக்கரங்கள் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டுள்ளது 

Wednesday, May 24, 2017

47- கூடல் அழகர் கோவில்



தமிழகத்தில் மதுரையில் அமைந்துள்ள திருத்தலம் இது

இக்கோயிலின் கருவறையில் உள்ள பெருமாளின் பெயர் "கூடலழகர்".மாடத்தில் பள்ளிக் கொண்டிருக்கும் கோலம், அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது


உற்சவர் வியூக சுந்தரராஜப் பெருமாள்.

அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இக்கோயிலுடைய பெருமாளை 'அந்தர வானத்து எம்பெருமான்" என் கிறார்

ஐந்து கலசங்களுடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம்.எட்டுப் பிரகாரங்கள்.ஆண்டாள், சகக்ரத்தாழ்வா, நவக்கிரகாதியர்,ஆழ்வார்கள்,ஆச்சாரியர்கள்,மணவாள மாமுனிகள்,விச்வக்சேனர்,ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணன்,கருடன்,ஆஞ்சநேயர்,லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சந்நிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.

அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும், மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார்.

மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்ட அஷ்டாங்க விமானம் தரையில் விழுவதில்லை

பெரியாழ்வார்  இக்கோயிலில் உள்ள எம்பெருமானின் அந்தர வானத்து கோலத்தைக் கண்டே திருப்பல்லாண்டு பாடினார்

பொதுவாக சைவ சமயக் கோயில்களில் மட்டுமே நவக்கிரக சந்நிதி இருக்கும்.வைணவத் தளங்களில் அதற்கு பதிலாக சக்கரத்தாழ்வார் சந்நிதி இருக்கும்.வைணவத் தலமான இக்கோயிலில் நவக்கிரக சந்நிதி உள்ளது.
ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம் ஹோ பூமிபுரஸ்ய யௌம்ய சோமசுந்தரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸ்ய பார்கவோ பார்கவஸ்யச
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம்- செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம்- புதன்
ஸ்ரீவாமனவதாரம்- குரு
ஸ்ரீ பரசுராமவதாரம்- சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம்- சனி
ஸ்ரீ மச்சவதாரம்- கேது
ஸ்ரீ வராகவதாரம்- ராகு
ஸ்ரீ பலராமவதாரம்- குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாகக் கூறப்பட்டுள்ளன

Monday, May 8, 2017

46 - திருமோகூர்

காளமேகப் பெருமாள் கோவில்

இக்கோவில் மதுரைக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில்  ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது

இக்கோவிலின் மூலவர்
காளமேகப் பெருமாள்
தாயார் மோகனவல்லித் தாயார்
உற்சவர் திருமோகூர் ஆப்தன்
உற்சவத் தாயார் மோகனவல்லித் தாயார்
புஷ்கரணி சீராப்தி புஷ்கரணி..

இக்கோவிலிலுள்ள பல மணடபங்கள் சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர் திருப்பணீயாகும்

சந்நிதி உயரமான அதிட்டானத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும்

இக்கோவிலில், மண்டபத்தில் உள்ள இராமர், சீதை,மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லிலால் ஆன சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்கள் ஆகும்

இம்மண்டபத்தில் சந்நிதியை நோக்கியபடியே மருது பாண்டிய ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது

நம்மாழ்வார் இக்கோவிலின் மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார்

45- திருத்தங்கல்









திருத்தங்கள் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில்...108 வைணவத் திவ்விய தேசங்களில் பழைமையான ஒன்றாகும்

இதன் புராணப் பெயர்கள்

கருநீலக்குடி ராஜ்யத்து திருத்தங்கல்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமால் திருக்கோவில்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது இக்கோவில்

மூலவர் நின்ற நாராயணர்
உற்சவர்  திருத்தண்காலப்பன்

தாயார்-
செங்கமலத்தாயார்
அன்னநாயகி (ஸ்ரீதேவி)

பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி,பூதேவி,நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ, தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார்.பெருமாள் ஸ்ரீதேவையை மணம் புரிந்தருளிய திருத்தலம்.மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்தத் தலம்.அழகிய சாந்த மணவாளர் திருக்கோவில் தலம்.

சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்திகன் கதை இத்தலத்தில் நிகழ்ந்டஹ்தாகும்

இத்தலம் பற்றிய குறிப்புகள் மைசூர் நரசிம்மர் ஆலயத்தில் உள்ளது