Tuesday, June 14, 2016

22 - திருஇந்தளூர்

                                         

பரிமள ரங்கநாதர் திருக்கோயில்

மாயவரத்திலேயே அமைந்துள்ளது இத்திருத்தலம்.திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது

மூலவர் - பரிமள ரங்கநாதர், சுகந்தவன நாதர்

தாயார்- பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி

தீர்த்தம் -இந்து புஷ்கரணி

இத்தலத்தில் பெருமாள் வீரசயனத்தில் கிழக்குப் பார்த்துஅ ருள்பாலிக்கிறார்.இவரை சந்திரன் தரிசித்துள்ளார்.

நவக்கிரகத்தில் ஒன்றான சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்தைப் போக்குவதற்காக இத்தலத்தில் எம்பெருமானைக் குறித்து தவம் இருந்து நீங்கப் பெற்றதாக தலவரலாறு.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும்,230 அடி அகலமும் கொண்ட பெரிய கோயில் இது.வாசலில் சந்திர புஷ்கரணி தீர்த்தம் உள்ளது.இதில் நீராடித்தான் சந்திரன் தன் சாபம் நீங்கப் பெற்றான்.பெருமாளின் முகத்தை சந்திரனும், பாதததை சூரியனும், நாபிக்கமலத்தி பிரம்மனும் பூஜிக்கின்றனர்.தலைமாட்டில் காவிரித்தாயாரும், கால்மாட்டில் கங்கைத் தாயாரும் வழிபடுகிறார்கள்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜிக்கின்றனர்.

அம்பரீசன் எனும் மன்னன் ஏகாதசி விரதத்தை பல ஆண்டுகளாக கடைப் பிடித்து வந்தான்.ஏகாதசியில் விரதம் இருந்து, துவாதசியில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பான்.இவனது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.ஆனால், தேவலோகத்திலோ தேவர்கள், அம்பரீசன் நூறாவது விரதத்தை முடித்து விட்டால் தேவலோகப்பதவி கிடைத்து விடும், மானுடனுக்கு இப்பதவி கிடைத்துவிட்டால் தேவர்களின் மரியாதை குறைந்துவிடும் என பயந்தனர்.

இதனால் தேவர்கள் துர்வாசரிடம் சென்று முறையிட, துர்வாசர் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்.மன்னனின் விரோதத்தைத் தடுத்து நிறுத்த பூமிக்கு வந்தார். ஆனால், அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான்.ஏகாதசி விரதம் முடித்திருந்தாலும், துவாதசி முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும்.அப்போதுதான் முழுப்பயனும் அவனுக்குக் கிடைக்கும்.துவாதசி ஆரம்பிக்க மன்னன் உணவு உண்ண தயாரானான்.அதற்குள் துர்வாசர் வந்து விட்டார்.தன் விரதத்தைத் தடுக்க அவர் வந்துள்ளார் என மன்னன் அறியவில்லை.ஆகவே, துர்வாசரையும் தன்னுடன் உணவருந்த வேண்டினான்.முனிவர், நீராடி விட்டு வருவதாகக்  கூறிச் சென்றார்.

அவரது எண்ணம், துவாதசி முடிந்தபின்னர் வர வேண்டும் என்பதெ!

முனிவர் வர தாமதமாக...மன்ன னுக்கு தலைமைப் பண்டிதர்"உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறைகள் குடித்தால் விரதம் முடித்த முழுப்பயனும் கிடைக்கும்" என்றார்.மன்னனும் அப்படியேச் செய்தான்

இதை அறிந்த முனிவர் கோபம் கொண்டார்.ஒரு பூதத்தை வரவழித்து மன்னனைக் கொல்ல ஏவினார்.

பரிமளரங்கநாதரிடம் மன்னன் சென்று வேண்ட...பெருமாள் பூதத்தை விரட்டினார்.துர்வாசரும் பெருமாளிடம் மன்னிப்புக் கேட்க, பெருமாள் மன்னனிடம்"வேண்டியதைக் கேள்" என்றார்.

இத்தலத்தில் வீற்றிருந்து அனைவரையும் காக்க வேண்டும் என மன்னன் வேண்ட..பெருமாளும் தங்கி அருள்பாலித்து வருகிரார்   

No comments:

Post a Comment