Wednesday, June 1, 2016

8 - கோயிலடி (திருப்பேர் நகர்)

                                 

தஞ்சை, கும்பகோணத்திலிருந்து....திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி வழியாகச்  செல்லும்.பேருந்துகள் திருப்பேர் நகர் வழியாகவேச் செல்கிறது.கொள்ளிடத்தின்  அக்கரையில் அன்பிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர்.திருப்பேர் நகர், கோயிலடி என்றும் வழங்கப் படுகிறது.

காவிரிக்கரையில் ஒரு மேட்டின் மீது கோயில் அமைந்துள்ளபடியால், குளித்துவிட்டு பெருமளைத் தரிசிக்கவும் வசதியுள்ளது.

அப்பக்குடத்தான் என்ற பெருமானை அப்பாலா உலகநாதன் என்றும் அழைப்பர்.உபமன்யு முனிவர் அருகில் அமர்ந்துள்ளார்,அவருக்கு ஆசி  கூறும் வகையில் புஜங்கசயனமாக மேற்கு நோக்கி அரவணையில் துயில் கொண்டிருக்கும் பெருமானின் வலக்கரம் அப்பக்குடத்தை அணைத்திருக்கிறது.

தாயார் இந்திராதேவிக்கு, கமலவல்லி என்று மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது.

இக்கோயிலின் தீர்த்தம் இந்திர தீர்த்தம்.தலவிருட்சம் வில்வ மரமாகும்

நம்மாழ்வார் இங்கிருந்துதான் கடைசி பாசுரத்தைப் பாடியதாக வரலாறு உண்டு.எனவே, அவர் இங்கிருந்துதான் மோட்சம் பெற்றிருக்கக் கூடும் என்ற கருத்தும் உண்டு.

தினமும் மாலை வேளைகளில் பெருமாளுக்கு அரவணையாக அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள பெருமாளைத் தரிசித்து, சந்தானக் கிருஷ்ணனை மடியில் வைத்துப் பிரார்த்தனை செய்தால் மக்கட்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.இங்கு ஆஞ்சநேயர், வினாயகர் ஆகியோருக்கும் சந்நிகள் உண்டு.

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்,திருமழிசையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் 33 பாசுகரங்களால் இக்கோயிலை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment