Wednesday, June 15, 2016

23 - சிதம்பரம் - திருச்சித்ரகூடம்

                                           


கோவிந்தராஜன் திருக்கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே அமைந்துள்ள திருக்கோயில் ஆகும்

மூலவர் - கோவிந்தராஜர்

உற்சவர்- தேவாதி தேவன், சித்திரக்கூடத்துள்ளார்
தாயார்- புண்டரீகவல்லி
விமானம் - சாத்வீக விமானம்

குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தலம்

12 தீர்த்தங்கள் - புண்டரீக தீர்த்தம்,அமுதகூடம்,திருப்பாற்கடல்,கோடி தீர்த்தம்,கருட தீர்த்தம்,காவிரி தீர்த்தம்,சுவேத நதி தீர்த்தம்,இயம்பாகச் சேதன தீர்த்தம்,இந்திர தீர்த்தம்,அக்கினி தீர்த்தம்,நிர்ஜதா தீர்த்தம்,சாமி தீர்த்தம்

இத்தலத்தின் புராண பெயர் - தில்லைவனம், திருசித்ரகூடம்,புண்டரீகரபுரம்

கயிலையில் ஒரு முறை ஈசனும், பார்வதியும் ஆனந்த நடனம் ஆட, யார் சிறப்பாக ஆடினார் என தீர்ப்பு வழங்குமாறு அயனிடம் வேண்ட, அவர் தீர்ப்பளிக்கும் வல்லமை திருமாலுக்கே உண்டு என்றார்.பெருமாளோ, தன் மனதிற்கு உகந்த தில்லைவனத்தில் நடனமாடுங்கள், பார்த்துவிட்டு தீர்ப்பளிக்கிறேன் என்றார்.

தேவதச்சன் விஸ்வகர்மா, திருமாலின் ஆணைப்படி தில்லைவனமான திருசித்ரகூடத்தில் நடன சபை அமைத்தார்.

நடனம் தொடங்கே..உலகே கவனிக்கிறது.இறுதியில் ஊர்த்துவ தாண்டவத்தால் உமையை ஈசன் வெல்கிறார்.திருமாலும், வென்றது ஈசனே எனத் தீர்ப்பளிக்கிறார்.பின், சிவனின் வேண்டுதலுக்கு இணங்கப் பெருமாள் இங்கு பள்ளி கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார்

மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் பிரம்மா நான் கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் இருப்பார்.ஆனால் இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார்.பஞ்சபூதத் தலங்களில் ஆகாயமான இங்கு பெருமாள் வான் நோக்கிப் பள்ளிக் கொண்டிருப்பது சிறப்பு

No comments:

Post a Comment