Thursday, June 23, 2016

36 - திருத்தெற்றியம்பலம்

                                             



பள்ளிகொண்ட பெருமாள் கோயில்

நாகை மாவட்டம் திருநாங்கூர் அருகில் உள்ளது இத்திருத்தலம்

இறைவன் _ செங்கண்மால் ரங்கநாதர்

தாயார்- செங்கமலவல்லி

தீர்த்தம் - சூர்யபுஷ்கரணி

திருத்தெற்றியம்பலம் எனப்படும் பெருமாள் பள்ளி கொண்ட சந்நிதி.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலம்.திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளுல் ஒன்று.108 வைணவத் திருத்தலங்களில் இதில் மட்டுமே "அம்பலம்" என்ற சொல்லுடன் தலம் அழைக்கப்படுகிறது.மணவாள மாமுனிவர் இங்கு வந்து சென்றுள்ளார்

நான் கு தோள்களுடன் கிழக்கு நோக்கி சயனித்து பெருமாள் அருள்பாலிக்கிறார்,

திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளியிருக்கும் தைஅமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்.

No comments:

Post a Comment