Sunday, June 5, 2016

12 - திருச்சேறை

                                     

சாரநாதப் பெருமாள் கோயில்

கும்பகோணத்திலிருந்து 14 கிலோமீட்டர்  தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.கும்பகோணத்திலிருந்து, திருவாரூர் செல்லும் பேருந்துகள் இதன் வழி செல்லும்.

இக்கோயில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனலாம்.
380 அடி நீளமும் 234அடி அகலமும் கொண்டுள்ளது.கிழக்கு நோக்கியுள்ள ராஜகோபுரம் 90அடி உயரமானது.எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்குக் கரையில் அகத்தியர்,பிரம்மா,காவிரி,ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.உள்சுற்றில் ஸ்ரீனிவாச பெருமாள்,நம்மாழ்வார்,உடையவர்,கூரத்தாழ்வார், ராமர்,அனுமான், ராஜகோபாலன்,ஆண்டாள்,சத்திய பாமா,ருக்மணி,நரசிம்ம மூர்த்தி,பாலசாரநாதர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

மூலவர் சாரநாதர் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக உள்ளார்.இக்கோயிலில் மட்டுமே பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி, லட்சுமி,சாரநாயகி, நீளாதேவி என ஐந்து தேவியருடன் கணப்படுகிறார்.இத்தலத்து மண் மிகவும் சாரம் (சத்து)  நிறைந்தது எனவும்..அதனாலேயே சாரநாதர் ஈன் பெருமால் அழைக்கப்பட்டார் என்றும் வரலாறு.திருச்சாரம் மருவி திருச்சேறை ஆனது.மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயனும், இடது பக்கம் காவிரித்தாயும் அமைந்துள்ளனர்.

ஆதிசேஷன் குடையின் கீழ் தாயார் லட்சுமியுடன் பாற்கடலில் துயில் கொண்டிருந்த  மகாவிஷ்ணு, பிரம்மனை அழைத்து பிரளய காலம் வருகிறது.நீ பூலோகம் சென்று ஒரு புண்ணியத் தலத்தில் மண்ணெடுத்து குடம் செய்து அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய் எனக் கட்டளையிட்டார்.

பல ஆலயங்களில் மண் எடுத்து குடம் செய்தும் குடம் உடைந்த வண்ணம் இருக்க, மகாவிஷ்ணுவை பிரம்மன் வேண்ட, திருமால், பூலோக முக்கியத் தலங்களில் ஒன்றான திருச்சேறை சென்று தாரா தீர்த்தத்தில் நீராடி, மண் எடுத்து செய் என்றார்.

பிரம்மனும் அவ்வாறே செய்து வேத ஆகமங்களை பாதுகாத்தார்.

இதத்தவிர்த்து காவிரித்தாயின் தவத்தின் பயனாக பெருமாள் அவரது மடியில் குழ்ந்தையாக திகழ்ந்ததோடு அல்லாது அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி,நீளாதேவி, மகாலட்சுமி,சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார் என்பதும், மார்க்கண்டேயர் முக்தியடைந்தத் தலம் என்பதும் மரபு வழி வரலாறாகும்

விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர் தஞ்சையைஅ அண்ட நாயக்க மன்னன், மன்னார்குடியில் ராஜகோபால சுவாமிக்கு ஒரு கோயில் அமைக்கத் தீர்மானித்தார்.அதற்கான பொறுப்பை தன் அமைச்சரான
நரச பூபாலனிடம் அளித்தார்.பூபாலன், சாரநாதரின் பக்தர்.திருச்சேறையில் கோயில் அமைகக் விரும்பிய அமைச்சர், மன்னார்குடிக் கோயிலுக்கு கற்களை கொண்டு செல்லும் வண்டிகள், ஒவ்வொன்றிலும் ஒரு கல்லை திருச்சேறையில் இறக்கிவிடும்படிக் கூறினான்.இதையறிந்த மன்னன் கோபத்துடன் திருச்சேறை சென்றான்.அங்கு அரசனது கண்களுக்கு சாரநாதர்...ராஜகோபாலனாய்க் காட்சியளித்தார் என்பதும் இத்தலம் குறித்து மரபு வழி வரலாறாகும்

ஒருமுறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் என்று கேட்டு, இத்தல சாரபுஷ்கரணியில் மேற்குக் கரை அரசமரத்தடியில் தவம் இருந்தாள். பெருமாள் மகிழ்ந்து, குழ்ந்தைவடிவில்
காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார்.பின் கருட வாகனத்தில் சங்கு, சக்கரதாரியாக ஐந்தௌ லட்சுமிகளுடன் காட்சித் தர, காவிரியும், எப்போதும் இதுபோலக் காட்சியளிக்க வேண்டும் என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார்.மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு  இடப்பக்கத்தில் காவிரித்தாய் இருப்பதைக் காணலாம்.

திருமங்கையாழ்வார் இத்தலம் குறித்து பாசுரங்கள் பாடியுள்ளார்.

மூலவர்   - சாரநாதர்
தாயார்.- சாரநாயகி
தீர்த்தம்- சார புஷ்கரணி
உற்சவர்- ஸ்ரீசாரநாதப் பெருமாள்

No comments:

Post a Comment