Friday, June 3, 2016

10 - திருவழுந்தூர் (தேரழுந்தூர்)

                                                   


தேவாதிராஜன் கோயில்

ஒருமுறை பெருமாளும், சிவனும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தார்.காய் உருட்டும் போது நடுவராக இருந்த பார்வதி, பெருமாளுக்கு சாதகமாகக் கூற சிவனுக்குக் கோபம் வந்து பார்வதியை பசுவாக மாறும் படி சாபமிட்டார்.துணைக்கு சரஸ்வதியும்,லட்சுமியும் பசுவாக மாறி பூமிக்கு வந்தார்கள்.இவர்களை மேய்ப்பவராக பெருமாள் "ஆ"மருவியப்பன் என்ற நாமத்துடன் இத்தலத்தில் ஆட்சி புரிகிறார்.

மூலவர் பெருமாள் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர்.மூலஸ்தானத்தில் பார்வதி பசுரூபத்தில் உள்ளனர்.மார்க்கண்டேய முனிவர் பிறவா வரம் பெற ஆ மருவியப்பனை வணங்கினார்.அத்னால் அவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக் கொண்டார்.பக்த பிரஹலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார்.மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் மூவரும் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாவிக்கின்றனர்.மூலவர் மேல் உள்ள விமானம் கருட விமானம்.தர்ம தேவதை,உபரிசரவசு,காவிரி, கருடன்,அகத்தியர் ஆகியோர் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

இத்தலத்தில் திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார்.இக்கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது.அங்குதான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது.

இத்தலத்தில்தான் கவிசக்கரவர்த்தி கம்பர் பிறந்தார்.

உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேரில் வரும் போது, அதன் நிழல் எதில் பட்டாலும் அது கருகி விடும் வரம் பெற்றிருந்தான்,அவன் மேலே சென்றபோது, அதன் நிழல் கண்ணனின் மீதும்...அவர் மேய்த்துக் கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது.பசுக்கள் துன்பம் அடைந்தன.மன்னன் செருக்கை அடக்க நினைத்த கண்ணன், அவன் தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார்.மன்னனின் தேர் கீழே அழுத்தியது.அத்துடன் அவன் ஆணவமும் அழிந்தது.இதனால்தான் இத்தலம் தேரெழுந்தூர் ஆனது.

ஒருமுறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும், வைரமுடியையும் கொடுத்து 108 திருப்பதிகளுக்குள் எந்த பெருமாளுக்காவது உகந்ததாக அதைக் கொடுத்துவிடு என்றார்.அதன்படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைரமுடியைக் கொடுத்துவிட்டு...தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு விமானத்தைக் கொடுத்தார் கருடன்.அதனால் இங்குள்ள விமானம் கருடவிமானம் ஆயிற்று.அத்துடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது.(பெரும்பாலான கோயில்களில் கருடன் சந்நிதி பெருமாளின் எதிரில் இருக்கும்)

இக்கோயிலின் மூலவர் தேவாதிராஜன்
உற்சவர்- ஆமருவியப்பன்
தாயார் செங்கமலவல்லி
தீர்த்தம், தர்சன புஷ்கரணி, காவிரி

No comments:

Post a Comment