அண்ணன் பெருமாள் கோயில்
சீர்காழியிலிருந்து 8 மிலோமீட்டர் தொலைவில் சீர்காழி- டஹ்ரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ளது.திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்று.
இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் இத்தலத்திற்கு இப்பெயர் வந்தது.வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை.எனவே ஸ்வேத புஷ்கரணி...வெள்ளைக் குளமாகி பின் வெள்ளக்குளமாயிற்று.திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்ற தலம்.அவர் இத்தல இறைவனை அண்ணா என அழைத்துப் பாடியமையால் அண்ணன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது
அழகியமணவாள முனிக்கு இறைவன் இங்கு காட்சியளித்ததாக நம்பிக்கை.108 வைணவத் திருத்தலங்களில் திருமலையில் இறைவனுக்கும் வழங்கப்பட்டுள்ள பெயரே இத்தலத்திலும் இறைவனின் பெயராக உள்ளது.
இப்படி பெயர் உள்ளத் தலம் இது ஒன்றே.ஆகவே, திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்ற நம்பிக்கையில் திருப்பதிக்கு வேண்டுதலையை இங்கு செலுத்துவது மரபு. இதற்கு அதனால் தென் திருப்பதி ர்ன்றும் பெயர்
திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் பிறந்த தலமும், நீலன் என்ற பெயரில் பதியாக இருந்த திருமங்கையாழ்வார், ஆழ்வாராக மாறிய தலமும் இதுவாகும்.ஒரு மங்கையால் ஆழ்வாராக ஆனதால் திருமங்கையாழ்வார் என அழைக்கப்பட்டார்
இறைவன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்
இறைவன் - ஸ்ரீனிவாசன், பெருமாள்
தாயார் - அலர்மேல்மங்கை
தீர்த்தம்-ஸ்வேதபுஷ்கரணி
No comments:
Post a Comment