Monday, June 6, 2016

13 - திருத்தலைச்சங்காடு

இத்தலத்தில் இறைவன் 3அடி உயரத்தில் சுயம்புமூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தைன் மயிர்க்கால்கள் தெரியும்.

                               

அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்


ஒரே சமயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகள் தரிசங்கம் இங்குக் கிடைக்கிறது.சங்கநிதி,பதுமநிதி இருவரும் கோயில் நுழைவாயிலில் வரவேற்கின்றனர்.கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டியுள்ளான்.அதில் யானை நுழைய முடியாத அளவிற்கு கோயில்களும் கட்டியுள்ளான்.அப்படிப்பட்ட மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.கோயில் அமைப்பே சோமஸ்கந்தர் அமைப்பில் உள்ளது.அதாவது, கோயிலில் இடது பக்கம் சிவன் சந்நிதி,நடுவில் முருகன் சந்நிதி, வலப்பக்கம் அம்மன் சந்நிதி.

மகாவிஷ்ணு இவ்வுலக உயிர்களைக் காக்க சங்கரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமான சங்கைப் பெற்றார்.இத்தலத்தில் மகாவிஷ்ணுவிற்கு தனி சந்நிதி உண்டு.

தலைச்சங்காடு  அல்லது திருதலைச்சங்கநாண்மதியம் எனப்படும் இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

பழந்தமிழர்கள் இயற்கை தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும், அதனைச் சார்ந்த உறுக்கும் பெயரை வைத்திருக்கின்றனர்.எனவே தலை+சங்கு+காடு = தலைச்சங்காடு. சங்கு பூக்கள் மிகுதியாகத் தோட்டத்தில் பயிரிட்டு கோயில்களுக்கு அனுப்பப்பட்டதால் இப்பெயர் என கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

திருமால், உலக உயிரைக் காக்க சங்காரண்யேஸ்வரரை பூஜித்து தனது ஆயுதமாக சங்கைப் பெற்றுள்ளார்.திருமாலுக்கு,பாஞ்சசன்யம் எனும் சங்கினை வழங்கியக் காரணத்தால் சிவபெருமான் சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதன் என அழைக்கப்படுகிறார்.

திருமங்கையாழ்வார் இக்கோயில் பற்றி இரு பாசுரங்கள் எழுதியுள்ளார்.

மூலவர் - நாண் மதியப் பெருமாள் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்)
உற்சவர்- வெண்சுடர்ப் பெருமாள்
தாயார்-தலைச்சங்க நாச்சியார்  (சவுந்தர நாயகி)
உற்சவர் தாயார்- செங்கமலவல்லி
தீர்த்தம்- சங்கரபுஷ்கரணி 

No comments:

Post a Comment