Thursday, June 9, 2016

18 - திருவாலி - திருநகிரி

                                         

திருவாலி - அழகியசிங்கர் திருக்கோயில்

மூலவர் - அழகியசிங்கர் (லட்சுமி நரசிம்மன்)
உற்சவர்- திருவாலி நகராளன்
தாயார் - பூர்ணவல்லி (அம்ருதகடவல்லி)
தீர்த்தம்- இலாட்சணி புஷ்கரிணி

நாகபட்டினம் மாவட்டத்தில் திருவாலியில் இக்கோயில் அமைந்துள்ளது.குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது

இத்தலத்தைச் சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மன்,மங்கைமடம் வீர நரசிம்மன், திருநகிரி யோக நரசிம்மன் மற்றும் மற்றொரு நரசிம்மத் தலமான ஹிரண்ய நரசிம்மன் ஆகிய தலங்கள் உள்ளன.இத்தலத்தில் மூலவர் சந்நிதியில் மேல் உள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படும்.இங்கு திருமங்கையாழ்வார் இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.

பத்ரிகாசிரமத்திற்கு அடுத்த்தாக பெருமாள் திருமந்திரத்தைத் தானே உபதேசம் செய்த இடமாதலால் பத்ரிக்கு இணையானது இத்தலம். லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லட்சுமி நரசிம்ம தீர்த்தம்" என்ற பெயரும் உண்டு.திருவாலியையும் தரிசிப்பதால் இங்கு பஞ்ச நரசிம்ம தலங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை வேண்டினாள்.பெருமாள் கூறியபடி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாகப் பிறந்தாள்.பெருமாளைத் திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழி மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள், திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.இதை முன்னிட்டு ஆண்டுதோறும் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடதி...மந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார்.இதனால் பயந்து பொன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமிதேவியை வேண்டினர்.அவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம் செய்து கொண்டார்.எனவே, இவ்வூர் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்றது..அதுவே நாளடைவில் திருவாலி ஆனது

திருமங்கையாழ்வார் குறுநில மன்னனாக இங்கு திகழ்ந்ததால் அவர் பெயர் ஆலிநாடன் ஆயிற்று.

திருநகிரி
----------------------

மூலவர் _ தேவராஜன்
உற்சவர்- கல்யாண ரங்கராஜன்
தாயார்- அமிர்தவல்லி
தீர்த்தம்- இலாக்ஷ புஷ்கரிணி

நாகப்பட்டினம் தலத்திலுள்ள மற்றொரு ஊர் திருநகிரி

குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள தலம்

திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சந்நிதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார்.இவருக்கு எதிரே ஒரு கொடி மரமும்,பெருமாளுக்கு எதிரே ஒன்றும் ஆகிய இரு கொடிமரங்கள் இத்தலத்தில்

பிரம்மாவின் புத்திரன் பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான்.அவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால் லட்சுமி கோபம் கொண்டு இத்தலத்தில் இருந்த தாமரை மலருகுள் ஒளிந்து கொண்டாள்.பெருமாள்ல்த லட்சுமியைத் தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார்.அருகிலுள்ள திருவாலியும் இதே போல ஆலிங்கனகோலத்தில் இருப்பதால் இரண்டும் சேர்ந்து திருவாலி-திருநகிரி ஆயிற்று.

திரேதா யுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸு மன்னனாக இத்தலத்தின்  புஷ்பீக விமானத்தில்  வரும்போது பறக்காமல் விமானம் அப்படியே நின்று விட்டது.எனவே இத்தலம் புண்ணியமான தலம் எனக் கருதி தனக்கு மோட்சம் கிடைக்க பெருமாளிடம் வேண்ட, கிடைக்கவில்லை.

அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான்.அப்படியாயினும் தனுக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என்றார்.

கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனனின் மகனாகப் பிறந்தான்.இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய எண்ணினான்.அவளோ, ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் உங்களுக்கு மனைவி ஆவேன்" என்றாள்.இந்த அன்னதானத்திற்கான பொருள் தீ ர்ந்தபடியால் நீலன் வழிப்பறியில் ஈடுபடலானான்.

அந்த நேரத்தில் பெருமாள் லட்சுமியைத் திருமணம் செய்துக் கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வந்த போது நீலன் மறித்து வழிப்பறி செய்ய, பெருமாள் நீலனுக்கு அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்து ஆட்கொண்டார்.

இத்தல வரலாறும், திருவாலியின் வரலாறும் ஒரே வரலாறு

No comments:

Post a Comment