Tuesday, June 21, 2016

32 - அரியமேய விண்ணகரம்

                                     

குடமாடு கூத்தன் திருக்கோயில்

மூலவர் - கடமாடு கூத்தன்

உற்சவர் - சதுர்புஜ கோபாலர்

தாயார் - அமிர்தவல்லி

தீர்த்தம்- அமிர்த தீர்த்தம்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

பெருமாள் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய்ப் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சித் தருகிறார்.குடத்துடன் ஆடிக்கொண்டே வந்தவர் என்பதால் குடமாடு கூத்தன் எனப் பெயர்.கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து கொண்டு மக்களைக் காத்தவர் கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் எனலாம்.திருமங்கையாழ்வார் இவரை, அசுரர்களை அழித்து அமுதம் எடுத்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை சூரசம்காரம் செய்தது என புகழ்பாடி பகைவர்களை அழித்து நல்வழி காட்டுபவர் என மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருநாங்கூரில் உள்ள 11 திவ்வியத்தலங்களில் இதுவும் ஒன்று.அரி (விஷ்ணு)மேவியிருக்கும் தலம் என்றும் அரியமேய விண்ணகரம் என்றும் பெயர்.

இங்கு கொடிமரம் இல்லை.பீடத்தின் மீது ஏறிச்சென்றே இறைவனை வணங்கும்படி பெரியதாக உள்ளது.

No comments:

Post a Comment