Monday, June 20, 2016

30 - திருமணிமாடக் கோயில்

                                       



திருநாங்கூர்-  நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழியிலிருந்து தெங்கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநாராயண பெருமாள் கோயில்

மூலவர் - நாராயணன், நந்தாவிளக்குப் பெருமாள்

உற்சவர்- நாராயணன், அளத்தற்கரியான்

தாயார்- புண்டரீகவல்லி

தீர்த்தம் - இந்திர புஷ்கரிணி,ருத்ர புஷ்கரிணி

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்த இங்கு இறைவன் எழுத்தருளியிருப்பதால் திருமணிமாடக் கோயில் எனப் பெயர் பெற்றது.பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணன் அதேபோன்று அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.ராமானுஜருக்கும் நாராயண மந்திரம் உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு இறவனைத் தரிசித்துள்ளார்.


கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார்

No comments:

Post a Comment