Tuesday, June 27, 2017

58- திருக்கோளூர்



இத்தலம் நவ திருப்பதியில் மூன்றாவதாகும்

பெருமாள்- வைத்தமாநிதி பெருமாள்

தாயார்- குமுதவல்லி. கோளூர்வள்ளி

தீர்த்தம்- குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்தத்தலமாகும்

பார்வதியின் சாபத்தால் குபேரனிடம் இருந்த நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் விலகி, திருமாலிடம் சரணடைந்தன.ஆகவே, இத்தலப் பெருமாள் வைத்தமாநிதி எனப்படுகிறார்.பின்னர், குபேரன், திருமாலை வழிபட்டு இழந்த செல்வங்களைப் பெற்றார்

ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.இறைவன் கிழக்கு நோக்கி சயனக் கோலத்தில்

மணவாள மாமுனியும்,நம்மாழ்வாரும் (12பாடல்கள்) மங்களாசாசனம் செய்துள்ளனர்

மதுரகவியாழ்வார் அவதரித்தத் தலமாகும்

இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில்.இத்தலத்திலும், ஆதனூரிலும் ஆண்டளக்கும் ஐயன் கோயிலிலும் காணப்படுகிறார்

(திருக்கோளூரில் வாழ்வது புண்ணியமாகும்.ஸ்ரீராமானுஜர் இத்தலத்திற்கு வந்த போது, மோர் விற்கும் பெண் இவ்வூரிலிருந்து வெளியேறுகிறாள்.ராமானுஜர் அதற்கான காரணம் கேட்கையில் அவர் வைணவப் பெரியோர்கள் வைணவத்திற்காக ஆற்றிய 81 தொண்டுகளைக் கூறி , அது போல நான் இல்லையே! என வருந்துகிறாள்.மோர் விற்கும் பெண்ணிற்கு இருக்கும் திறமையைக் கண்டு மகிழ்ந்தவர், அவளது இல்லத்திற்குச் சென்று உணவருந்துகிறார்.இதுவே திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் என வழங்கப்படுகிறது) 

No comments:

Post a Comment