Wednesday, June 21, 2017

54- வைகுண்டநாதர் கோவில் (ஸ்ரீவைகுண்டம்)



திருவைகுண்டம்...கள்ளபிரான் திருக்கோயில்

மூலவர்- வைகுந்த நாதன் (நின்ற திருக்கோலம்)

உற்சவர்- கள்ளபிரான், ஸ்ரீசோரநாதர்

தாயார்- வைகுண்டவல்லி, பூதேவி

உற்சவ தாயார்- ஸ்ரீ சோரநாயகி

தீர்த்தம்- பிருகு, தாமிரபரணி நதி

பிரத்யட்சம்- பிருகு சக்கரவர்த்தி , இந்திரன்

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்

துத்துக்குடி மாவட்டத்தில்...திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது

நவ திருப்பதிகளில் ஒன்று.  நவக்கிரகங்களில் சூரியனுக்குரியத் தலம்

9 நிலைகளும்,110 அடி உயரமும் கொண்டுள்ளது ராஜகோபுரம்.

மூலவர் வைகுண்டநாதர், சந்திர விமானத்தின் கீழ், ஆதிஷேசன் குடை பிடிக்க, நான் கு கரங்களுடன், மார்பில் மாகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சித் தருகிரார்

உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூ தேவி, ஸ்ரீதேவியுடன் காட்சித் தருகிறார்.

இரண்டு தாயார்களுக்கும் டஹ்னித்தனி சன்னிதிகளும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளது.

தலவிருட்சம்-பவளமல்லி

பிரம்மதேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார்.தாமிரபரணிக்கரையில் உள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் டஹ்வம் புரிய நாராயணனும் வேடஹ்ங்களை மீட்டு அவருக்கு உதவும் பொருட்டு அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என் கிரது இக்கோயிலின் தல புராணம்

உறசவர், கள்ளபிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தி...

ஸ்ரீவைகுண்டம்நகரில் திருட்டுத் தொழில் செய்து வந்த  காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாதரை வழிப்பட்டு பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான்.கிடைத்தப் பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்தி விட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான்.ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்ற போது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக் கொள்ள இவன் மட்டும் தப்பி விட்டான்.அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான்.காலதூஷகன் வைகுண்டநாதரை வேண்ட, பெருமாளே காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார்.அரசனிடம், அவன் தன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறிவிட்டதை உணர்த்தி, பின் அரசனுக்கும், காலதூஷனுக்கும்  காட்சி தந்து அருளினார்.திருடனாக வந்தமையால்பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப் படுகிறார்

நவதிருப்பதியில் முதன்மையானத் தலம்.நம்மாழ்வார், நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாக பாடியுள்ளார்.

இங்குள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்து அற்புதமான சிற்பங்கள் உள்ளன.சித்திரை, ஐப்பசி மாதங்களில் 6ஆம் நாளன்று சூரியஒளி வைகுண்டநாதர் மீது விழுகிறது.அடஹ்ற்கு ஏற்றாற் போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது.

ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோயில் கோட்டையாகப் பயன்படுத்தப் பட்டது.

இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும்..இவ்விழா, தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.விழாவில் னவ திருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருட வாகனத்தில் எழுந்தருளுவதைப் பார்க்கலாம்.நம்மாழ்வாரின் உருவச் சிலை அன்ன வாகனத்தில் ஒவ்வொரு நவத்திருப்பதிக்கும் எடுத்துச் செல்லபப்ட்டு அந்தந்த தலங்களில், அந்தந்தத் தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும் 

1 comment: