Friday, June 23, 2017

57- திருக்குறுங்குடி



அழகிய நம்பிராயர் கோயில்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது  இத்தலம்

மூலவர்- அழகிய நம்பிராயர் (வைஷ்ணவ நம்பி)

தாயார்- குறுங்குடிவல்லி நாச்சியார்

தீர்த்தம் - திருப்பாற்கடல், பஞ்சதுறை

இத்தலத்தைப் பற்றி, திருமழிசை ஆழ்வார்,நம்மாழ்வார்,பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர்

மூலவர் நம்பிராயரின் வலப்புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னிதி அமைந்திருப்பது சிறப்பாகும்

நின்ற, அமர்ந்த,நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இங்குக் காட்சித் தருகிறார்

வராக அவதாரம் கொண்டு திருமால் தன் நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராக ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி என்றாயிற்று

நம்பியாற்றின் கரையில் அமர்ந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல்

Thursday, June 22, 2017

56 - திருக்குளந்தை




பெருங்குளம் பெருமாள் கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது

மூலவர்- சோர நாதன் (மாயக்கூத்தன்)

தாயார்- குளந்தை வல்லித்தாயார் (கமலா தேவி)
                  அலமேலு மங்கைத் தாயார்

தீர்த்தம் - பெருங்குளம்

நம்மாழ்வார் ஒரே ஒரு பாடல் மூலம் மங்களாசாசனம் செய்தத் தலம்

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 7 மைல் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

இறைவன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் சோரநாதன் (மாயக்கூத்தன்),ஸ்ரீனிவாசன் என்ற பெயர்களில் பெருமாள் அழைக்கப்படுகிறார்

Wednesday, June 21, 2017

55- திருவரகுணமங்கை (நத்தம்)



தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்னும் ஊரில் அமைந்துள்லது இத்தலம்

மூலவர்- விஜயாசனப் பெருமாள்

தாயார்- வரகுணவல்லித் தாயார், வரகுணமங்கைத் தாயார்

அகநாச தீர்த்தம்,அக்னி தீர்த்தம்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

இத்தலை ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே ஒரு ,மைல் தொலைவில் உள்ளது.இறைவர், கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள்

இதன் விமானம் விஜயகோடி விமானம் என்னும் வகையைச் சேர்ந்தது

54- வைகுண்டநாதர் கோவில் (ஸ்ரீவைகுண்டம்)



திருவைகுண்டம்...கள்ளபிரான் திருக்கோயில்

மூலவர்- வைகுந்த நாதன் (நின்ற திருக்கோலம்)

உற்சவர்- கள்ளபிரான், ஸ்ரீசோரநாதர்

தாயார்- வைகுண்டவல்லி, பூதேவி

உற்சவ தாயார்- ஸ்ரீ சோரநாயகி

தீர்த்தம்- பிருகு, தாமிரபரணி நதி

பிரத்யட்சம்- பிருகு சக்கரவர்த்தி , இந்திரன்

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்

துத்துக்குடி மாவட்டத்தில்...திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது

நவ திருப்பதிகளில் ஒன்று.  நவக்கிரகங்களில் சூரியனுக்குரியத் தலம்

9 நிலைகளும்,110 அடி உயரமும் கொண்டுள்ளது ராஜகோபுரம்.

மூலவர் வைகுண்டநாதர், சந்திர விமானத்தின் கீழ், ஆதிஷேசன் குடை பிடிக்க, நான் கு கரங்களுடன், மார்பில் மாகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சித் தருகிரார்

உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூ தேவி, ஸ்ரீதேவியுடன் காட்சித் தருகிறார்.

இரண்டு தாயார்களுக்கும் டஹ்னித்தனி சன்னிதிகளும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளது.

தலவிருட்சம்-பவளமல்லி

பிரம்மதேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார்.தாமிரபரணிக்கரையில் உள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் டஹ்வம் புரிய நாராயணனும் வேடஹ்ங்களை மீட்டு அவருக்கு உதவும் பொருட்டு அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என் கிரது இக்கோயிலின் தல புராணம்

உறசவர், கள்ளபிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தி...

ஸ்ரீவைகுண்டம்நகரில் திருட்டுத் தொழில் செய்து வந்த  காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாதரை வழிப்பட்டு பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான்.கிடைத்தப் பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்தி விட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான்.ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்ற போது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக் கொள்ள இவன் மட்டும் தப்பி விட்டான்.அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான்.காலதூஷகன் வைகுண்டநாதரை வேண்ட, பெருமாளே காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார்.அரசனிடம், அவன் தன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறிவிட்டதை உணர்த்தி, பின் அரசனுக்கும், காலதூஷனுக்கும்  காட்சி தந்து அருளினார்.திருடனாக வந்தமையால்பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப் படுகிறார்

நவதிருப்பதியில் முதன்மையானத் தலம்.நம்மாழ்வார், நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாக பாடியுள்ளார்.

இங்குள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்து அற்புதமான சிற்பங்கள் உள்ளன.சித்திரை, ஐப்பசி மாதங்களில் 6ஆம் நாளன்று சூரியஒளி வைகுண்டநாதர் மீது விழுகிறது.அடஹ்ற்கு ஏற்றாற் போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது.

ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோயில் கோட்டையாகப் பயன்படுத்தப் பட்டது.

இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும்..இவ்விழா, தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.விழாவில் னவ திருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருட வாகனத்தில் எழுந்தருளுவதைப் பார்க்கலாம்.நம்மாழ்வாரின் உருவச் சிலை அன்ன வாகனத்தில் ஒவ்வொரு நவத்திருப்பதிக்கும் எடுத்துச் செல்லபப்ட்டு அந்தந்த தலங்களில், அந்தந்தத் தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும் 

Friday, June 16, 2017

53 - திருப்பேரை



திருப்பேரை அல்லது தென் திருப்பேரை

மகர நெடுங்குழைக்காதன்  திருக்கோயில் (வீற்றிருந்த கோலம்)

உற்சவர்- நிகரில் முகில் வண்ணன்

தாயார்- குழைக்காத நாச்சியார்

நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம், திருநகிரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தென் கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

ஸ்ரீபேரை (லட்சுமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்ற பெயரைப் பெற்றது இந்தத் தலம்

108 வைணவத் தலங்களில் திருச்சிக்கு அருகில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் இருப்பதால் இத்தலத்தை தென் திருப்பேரை என்று அழைத்தனர்.

இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம் , மகர தீர்த்தம் ஆகியவை தீர்த்தங்கள்

நம்மாழ்வார் 11 பாசுரங்களும், மணவாள மாமுனிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளனர் 

Friday, June 2, 2017

52- திருப்புளிங்குடி (நவ திருப்பதி)



தூத்துக்குடி மாவட்டத்தில், வரகுணமங்கையிலிருந்து கிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது இத் தலம்.

மூலவர் - பூமிபாலகர்
உற்சவர் - காய்சின வேந்தர் (காசினி வேந்தர்)

தாயார் - மலர்மகள் நாச்சியார்,பூமிப்பிராட்டி

தீர்த்தம்- இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்.12 பாசுரங்கள் பாடியுள்ளார்.

இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தலபுராணத்திலும் குறிக்கப் பெற்றுள்ளது.இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலகர் என்ற பெயர்களில் பள்ளிகொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார்.

இறைவியின் பெயர் மலர் மகள் நாச்சியார்

நவக்கிரககளில் வியாழனோடு சம்பந்தப்பட்டத் தலமாகும்

இத்தலத்தில் உள்ள லட்சுமி தேவி, பூமிபிராட்டி ஆகியோரின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிக மிகப் பெரியவைகள்.தவிர்த்து, வேறு கோயில்களில் காணமுடியாக் காட்சியாக பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரியக் காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது

சயனக் கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை கருவறையைச் சுற்றி வருகையில் வடக்குப்புற சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு சன்னலின் வழியாகச் செவிப்பதற்கு ஏற்றாற்போல அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிற தலங்களில் அமையப்பெறாததாகும்

Wednesday, May 31, 2017

51- வானமாமலை



புராண பெயர்கள்

நாங்குநேரி
தோத்தாத்ரி
ஸ்ரீவரமங்கை(சீரிவரமங்கலநகர்)
நாகணை சேரி

இறைவன் - தோத்தாத்ரிநாதன்
இறைவி- ஸ்ரீதேவி,பூமி தேவி
தீர்த்தம்- சேற்றுத்தாமரை தீர்த்தம்

பிரத்யட்சம் உரோம (ரிஷி) முனிவர்

இது ஒரு சுயம்புத் தலமாகும்

இத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி,தோத்தாத்ரி,ஸ்ரீவரமங்கை நகர் என்று பல பெயர்கள் உண்டு

பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம்,நரசிம்மபுராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது

உரோம ரிஷி தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமக்ஷேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்ததால் ஸ்ரீவரமங்கல நகர் எனவும், ஆதிசேஷன் இங்கு தவமிருந்து திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலால் வானமாமலைஎனவும், இங்குள்ள குளத்தை நான் கு ஏரிகளாக வெட்டியதால்..நான் கு ..ஏரி...நாங்குநேரி எனவும், அந்த நாங்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப்பகுதியில் அமைந்ததால் நான் கூர் ஏர்  என்பது நாங்குநேரி ஆனது என்றெல்லாம் கூறப்படுகிறது

இங்கு இறைவனுக்கு தினமும் தைல அபிஷேகம் நடைபெறும்.அந்த எண்ணெய்யை எடுத்து இங்குள்ள நாழிக் கிணற்றில் ஊற்ரி வருகின்றனர்.இந்நாழிக் கிணற்றில் உள்ள எண்ணையை உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை

ஸ்ரீவானமாமலை மண்டபத்திற்கு இதுவே தலைமைப் பீடமாகும்.நம்மாழ்வார் மட்டும் இத்தலம் பற்றி 11 பாக்கள் பாடி மங்களாசசனம் செய்துள்ளார்.

இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது