Wednesday, July 12, 2017

61- திருக்காட்கரை



காட்கரையப்பன் கோயில், வாமன மூர்த்தி கோயில்

மூலவர்- காட்கரையப்பன்
தாயார்- வாத்சல்யவல்லி

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருக்காட்கரை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது

கடவுள் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரமான வாமனமூர்த்திக்கு அமைந்துள்ள மிகச்சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

கோயில் , வட்ட வடிவ கேரளா பாணியில் அமைந்துள்ளது.

இக்கோயில் பரசுராமரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது

அரக்க மன்னனான மகாபலி சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு அழுத்தி அழித்த இடம் இத்தலமாகும்

ஓணம் பண்டிகையை கொண்டாடப்படும் முதன்மைக் கோயிலாகும்

No comments:

Post a Comment