Tuesday, May 31, 2016

6 - திருவெள்ளறை

                                           
புண்டரீகாட்சன் கோயில்

திருவெள்ளறை, திருச்சிக்கு அருகில் துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும்.இங்கு புண்டரீகாட்சன் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

திருச்சியிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தலத்திற்கு ஸ்ரீரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாக பேருந்தில் செல்லலாம்.திருச்சி பஸ் நிலையத்திலிருந்தும் பஸ் வசதி உண்டு.

பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில் இது.

பெருமாள் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கி காணப்படுகிறது.தாயார் செண்பகவல்லி என்னும் பங்கயச்செல்வி.தாயாருக்கு தனி சந்நிதி உண்டு.

ஸ்ரீரங்கத்தைவிட பழைமையான இத்த்லம் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப் படுகிறது.வெண்மையான பாறையிலால் ஆன மலை என பொருள் பட வெள்ளறை என்றும் திருவெள்ளறை என்றும் அழைக்கப் படுகிறது.

திவ்யசந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்னிகா என ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள் அமைந்துள்ளன.

எங்குமில்லா வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும், தட்சிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன.தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமாளைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

சிபி சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனக (வெள்ளைப் பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு ச்வேதபுரிநாதன் என பெயர் ஏற்பட்டதாகவும் தல வரலாறு சொல்கிறது. இதன் காரணமாக ஸ்வேதபுரி நட்சத்திரம் என்றும் அழைக்கப் படுகிறது.

சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன.ஸ்ரீதேவி,பூதேவி,சூர்ய சந்திரர்கள், ஆதிசேஷன் ஆகியோர் மனித உருவில்  கைங்கர்யம் செய்வது தனிச் சிறப்பு.

ஸ்ரீதேவி,பூதேவி, நீளாதேவி ஆகிய மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் பெருமை

இதில் ஸ்ரீதேவி நாச்சியார்க்கு "திருவெள்ளறை' தாயாருக்கு சிறப்பு அம்சம் உள்ள இத்தலத்தில் அவரை வணங்கிய பின்னரே, இறைவன் சந்நிதிக்கு செல்ல இயலும்.பல்லக்கு புறப்பாடும், தாயார் பல்லக்கு முன்னே செல்ல, மூலவர் பல்லக்கு அதைத் தொடர்ந்து செல்லும்.(மற்ற இடங்களில் பெருமாள் முன் செல்ல தாயார் பின் தொடர்வார்)

பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.மொத்தம் 24 பாசுரங்கள்

இந்திரனோடு பிரமன்
ஈசனிமையவ ரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு
மறைந்துவ ராய்வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும்
சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்நியம் போதிது வாகும்
அழகனே! காப்பிட வாராய்

No comments:

Post a Comment