Monday, May 8, 2017

46 - திருமோகூர்

காளமேகப் பெருமாள் கோவில்

இக்கோவில் மதுரைக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில்  ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது

இக்கோவிலின் மூலவர்
காளமேகப் பெருமாள்
தாயார் மோகனவல்லித் தாயார்
உற்சவர் திருமோகூர் ஆப்தன்
உற்சவத் தாயார் மோகனவல்லித் தாயார்
புஷ்கரணி சீராப்தி புஷ்கரணி..

இக்கோவிலிலுள்ள பல மணடபங்கள் சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர் திருப்பணீயாகும்

சந்நிதி உயரமான அதிட்டானத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும்

இக்கோவிலில், மண்டபத்தில் உள்ள இராமர், சீதை,மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லிலால் ஆன சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்கள் ஆகும்

இம்மண்டபத்தில் சந்நிதியை நோக்கியபடியே மருது பாண்டிய ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது

நம்மாழ்வார் இக்கோவிலின் மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார்

No comments:

Post a Comment