Wednesday, May 24, 2017

47- கூடல் அழகர் கோவில்



தமிழகத்தில் மதுரையில் அமைந்துள்ள திருத்தலம் இது

இக்கோயிலின் கருவறையில் உள்ள பெருமாளின் பெயர் "கூடலழகர்".மாடத்தில் பள்ளிக் கொண்டிருக்கும் கோலம், அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது


உற்சவர் வியூக சுந்தரராஜப் பெருமாள்.

அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இக்கோயிலுடைய பெருமாளை 'அந்தர வானத்து எம்பெருமான்" என் கிறார்

ஐந்து கலசங்களுடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம்.எட்டுப் பிரகாரங்கள்.ஆண்டாள், சகக்ரத்தாழ்வா, நவக்கிரகாதியர்,ஆழ்வார்கள்,ஆச்சாரியர்கள்,மணவாள மாமுனிகள்,விச்வக்சேனர்,ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணன்,கருடன்,ஆஞ்சநேயர்,லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சந்நிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.

அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும், மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார்.

மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்ட அஷ்டாங்க விமானம் தரையில் விழுவதில்லை

பெரியாழ்வார்  இக்கோயிலில் உள்ள எம்பெருமானின் அந்தர வானத்து கோலத்தைக் கண்டே திருப்பல்லாண்டு பாடினார்

பொதுவாக சைவ சமயக் கோயில்களில் மட்டுமே நவக்கிரக சந்நிதி இருக்கும்.வைணவத் தளங்களில் அதற்கு பதிலாக சக்கரத்தாழ்வார் சந்நிதி இருக்கும்.வைணவத் தலமான இக்கோயிலில் நவக்கிரக சந்நிதி உள்ளது.
ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம் ஹோ பூமிபுரஸ்ய யௌம்ய சோமசுந்தரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸ்ய பார்கவோ பார்கவஸ்யச
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம்- செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம்- புதன்
ஸ்ரீவாமனவதாரம்- குரு
ஸ்ரீ பரசுராமவதாரம்- சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம்- சனி
ஸ்ரீ மச்சவதாரம்- கேது
ஸ்ரீ வராகவதாரம்- ராகு
ஸ்ரீ பலராமவதாரம்- குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாகக் கூறப்பட்டுள்ளன

No comments:

Post a Comment