Tuesday, May 30, 2017

50-திருத்துலைவில்லி மங்கலம் (நவ திருப்பதி)



புராணப் பெயர் திருத்துலைவில்லி மங்கலம்

தேவர்பிரான் திருக்கோயில் (தெற்கு கோயில்..ராகு அம்சம்)

மூலவர்- ஸ்ரீஅரவிந்த  லோசனன் (செந்தாமரைக் கண்ணன்)

தாயார்- கருந்தடக்கண்ணி நாச்சியார்

தீர்த்தம்- அஸ்வினி தீர்த்தம் (அசுவனி தேவர்கள் நீராடிய தீர்த்தம்

பிரத்யட்சம்- அஸ்வினி ,தேவர்கள்,சுப்ரபர்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்

இது இரட்டைத் திருப்பதி எனவும் வழங்கப்படும் தலமாகும்

திருத்துலைவில்லி
மங்கலம்
(திருத்தொலைவில்லி மங்களம்)
இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து, ஒரு திவ்வியத் திருத்தலமாகக் கருதப் படுகிறது.ஆயினும், நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலமாகிறது

இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது

ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுதபோது ஒளிரும் வில்லையும், தராசையும் கண்டு வியப்புற்று கையில் எடுக்க , அவை சாபவிமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உரு பெற்றன.
குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர்.இதனாலேயே இவ்வூர்,துலை,வில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது

பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட பெருமாள் காட்சித் தந்தார்.தேவப்பிரான் என்ற பெயரும் பெற்றார்

இத்தலம் இரட்டத் திருப்பதியில் தெற்குத் திருக் கோயில்.ராகு அம்சம் திருக்கோயில்..

திருத்துலைவில்லி அரவிந்தலோசனன் திருக்கோயில்
-----------------------------------------------------------------------------------------

தினந்தாறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர்.இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை எங்கிருந்து கொண்டு வருகிரார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்க வரும் போது, பின் தொடர்ந்து வரும்போது, சுப்ரரர் காரணத்தைக் கேட்டார்.செந்தாமரை மலர்கள் கொண்டு வந்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும், அங்கேயே தமக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் பெருமாள் கூறினார்

இத்தலம் இரட்டத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில்

No comments:

Post a Comment