Monday, May 29, 2017

49- ஆழ்வார் திருநகரி (நவ திருப்பதி)



ஆழ்வார் திருநகரி..ஆதிநாதன் கோயில்

இந்த ஊர்  திருக்குருகூர் எனவும் வழங்கப்படுகிறது

மூலவர் - ஆதி நாதன்

தாயார்- ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி

தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், திருச்ச்ங்கண்ணி துறை

பிரதியட்சம்- பிரம்மா, மதுரகவியாழ்வார்,நம்மாழ்வார்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

நம்மாழ்வார் அவதரித்தத்தலம்.தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இத்தலம் பிரம்மாவிற்குக் குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால்குருகூர் எனப்படுகிறது .ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என்னும் திருப்பெயர் பெற்றார்.

நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிஷேசன்.தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில், எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தம்பியான இலக்குவனிடம் ராமபிரான் கூறியிருந்தார்

அப்போது வந்த துர்வாசரை அனுமதிக்க இலக்குவன் தயங்குகையில், அவர் அவனை புளிய மரமாகப் பிறப்பெடுக்குமாறு சபித்து விட்டார்

அதனால், இத்தலத்தில் இலக்குவன் புளியமரமாகி விட, அவனது வேண்டுகோலுக்கு இணங்கி ராமன் பின்னாளில் நம்மாழ்வாராக அவதரித்து, அப்புளியமரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால்..இத்தலம் ஷேச க்ஷேத்திரம் என விளங்குவதாகக் கூறுவார்கள்

No comments:

Post a Comment