அழகிய நம்பிராயர் கோயில்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது இத்தலம்
மூலவர்- அழகிய நம்பிராயர் (வைஷ்ணவ நம்பி)
தாயார்- குறுங்குடிவல்லி நாச்சியார்
தீர்த்தம் - திருப்பாற்கடல், பஞ்சதுறை
இத்தலத்தைப் பற்றி, திருமழிசை ஆழ்வார்,நம்மாழ்வார்,பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர்
மூலவர் நம்பிராயரின் வலப்புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னிதி அமைந்திருப்பது சிறப்பாகும்
நின்ற, அமர்ந்த,நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இங்குக் காட்சித் தருகிறார்
வராக அவதாரம் கொண்டு திருமால் தன் நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராக ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி என்றாயிற்று
நம்பியாற்றின் கரையில் அமர்ந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல்
No comments:
Post a Comment