திருப்பேரை அல்லது தென் திருப்பேரை
மகர நெடுங்குழைக்காதன் திருக்கோயில் (வீற்றிருந்த கோலம்)
உற்சவர்- நிகரில் முகில் வண்ணன்
தாயார்- குழைக்காத நாச்சியார்
நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம், திருநகிரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தென் கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
ஸ்ரீபேரை (லட்சுமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்ற பெயரைப் பெற்றது இந்தத் தலம்
108 வைணவத் தலங்களில் திருச்சிக்கு அருகில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் இருப்பதால் இத்தலத்தை தென் திருப்பேரை என்று அழைத்தனர்.
இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.
சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம் , மகர தீர்த்தம் ஆகியவை தீர்த்தங்கள்
நம்மாழ்வார் 11 பாசுரங்களும், மணவாள மாமுனிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்
No comments:
Post a Comment